நிறைய இருக்காங்களா
எல்லாரோட லிஸ்ட்டும் பெருசுதான்..
ஞாபகம் வர்றவங்களை சொல்லுங்க.. இல்லாட்டி விட்டுடுங்க ஜஸ்ட் ஒரு remembrance தான்..
உதாரணத்துக்கு மல்லிகா டியரின்
ஒரு ஸ்டோரி சொல்லுறேன்
"சத்தமில்லாமல் ஒரு யுத்தம்"
என்னதான் பாட்டியும் தாத்தாவும்
தங்கத்தட்டில் வைச்சு தாங்கினாலும்
பெற்றோரின் பாசத்துக்கு
ஏங்கும் ஹீரோ பார்த்திபனை
சொல்லுவனா?
பாசம்ன்னா என்னன்னு
குடும்பம்ன்னா என்னன்னு
அவனை உணர வைத்த
அபிராமியை சொல்லுவனா?
வேண்டாத சந்தர்ப்ப சூழ்நிலையால்
அன்பான கணவனைப் பிரிந்து
தன்னைக் காதலித்தவனையே
மீண்டும் மணம் செய்து இரண்டு
பிள்ளைகளைப் பெற்றும்
கண்ணான மூத்த பிள்ளையைப்
பிரிந்து நிம்மதியில்லாமல்
வாழும் நித்யாவைச் சொல்லுவனா?
ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப்
போய் நல்ல வாழ்க்கையைத்
தொலைத்துவிட்டு வேறொரு
வாழ்க்கை வாழ்ந்தும் மூத்த
மகனின் பாசத்துக்கு ஏங்கும்
பாஸ்கரைச் சொல்லுவனா,
மித்ராபரணி டியர்?
ஆனாலும் இந்தக் கதையில்
நேரில் நான் பார்க்க விரும்பும்
ஒரே நபர் பார்த்திபன்தான்ப்பா
இப்படி ஒவ்வொரு கதையிலும்
சொல்லுவேன்
ஆனால் இடம் போதாதுப்பா