E13 Nee Enbathu Yaathenil

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மயக்கத்தை மீறிய தயக்கம்..
முறையின்றி நடந்தவன்.
இப்போது முறைபடுத்த தவறவில்லை.
அவளது முறைப்பை பொருட்படுத்தவில்லை..


அழகாய் மாறினாள் இப்போது..
அழகு வாழ்க்கை எப்போது...

சூப்பர்டா பாத்தி....

முறையின்றி நடந்தவன்.
இப்போது முறைபடுத்த தவறவில்லை.
அவளது முறைப்பை பொருட்படுத்தவில்லை.. - அழகாய் செதுக்கிய வரிகள்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மாற்றங்கள் உண்டு
மனதில்
தடுமாற்றங்கள் உண்டு
மாற்றத்தை கண்டு
தடுமாற்றத்தை வென்று
உன்னை நான் சேர்வேன்
என்னுள் கொள்வேன்

கண்ணன் நான்
மாயக்கண்ணன் நான்
மாயம் செய்து அன்பு ம(மா)யம் செய்து
உன்னை சேரும் கண்ணன் நான்
மந்திரமில்லை தந்திரமில்லை
அன்பை தவிர வேறுன்றுமில்லை
காதலுண்டா காணவில்லை
இன்று வரை எண்ணவுமில்லை

எண்ணமதில் நிறைந்திட்ட பெண்ணவளோ
என் எண்ணமதை மறுத்திட்டாள்
தன் எண்ணமதை மறைத்திட்டாள்

காயம் காயம் என்று அலறினாயே
வெளிக்காயம் மட்டுமல்ல
உள்காயம் உனக்கு மட்டுமல்ல
இருவருக்கும் பொதுவதுவே
காயத்தில் பெரிதென்ன சிறிதென்ன
காண்பர் கண்ணை பொறுத்தது அளவு
இங்கே என் காயம் போனாலும்
உன் காயம் ஆறாத பெருங்காயமாய் போனதோ
மருந்து வேண்டாம் மாத்திரை வேண்டாம்
மாயம் செய்து விட்டால் போதும்
உன் மனமாயம் செய்து விட்டால் போதும்

சூப்பர்டா மீரு...

காயத்தில் பெரிதென்ன சிறிதென்ன ரொம்ப சரிடா சூப்பர்...
 

fathima.ar

Well-Known Member
சூப்பர்டா பாத்தி....

முறையின்றி நடந்தவன்.
இப்போது முறைபடுத்த தவறவில்லை.
அவளது முறைப்பை பொருட்படுத்தவில்லை.. - அழகாய் செதுக்கிய வரிகள்...

Thanks saveeee
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மல்லி,

சூப்பர் பதிவு...

சுந்தரியை சீண்டும் போது (மாய) கண்ணனாகவும் அவன் பேச்சை கேட்க வைப்பதில் அவளிடம் அதிகாரம் காட்டுவதில் துரையாகவும் இருக்கிறான் நம் சுந்தரியின் மணாளன்...

சுந்தரி ஆடை மாறியது போல் மனமும் மாறி அவனுடன் இணைந்து வாழும் நாளுக்காய் நாங்கள் காத்திருக்கிறோம்...
 

murugesanlaxmi

Well-Known Member
எதிரியின் பலம் கண்டு அஞ்சாதே எவனும் பலம் மட்டும் கொண்டு உருவாக்கப்படவில்லை எவ்வளவு பலம் இருக்கோ அவ்வளவு பலவீனமும் இருக்கும். - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் -

சுந்தரியிடம் பலமும் இருக்கு பலவீனமும் இருக்கு
 

murugesanlaxmi

Well-Known Member
ஒரு நாள் பசுவதை செய்யும் இடத்தில் ஒருவன் கோமாதாவை ஸம்ஹாரம் செய்வதற்கு வந்தவுடன் கோமாதா அவனை பார்த்து சிரித்தது.
அதை பார்த்து அவன் கேட்டான். நான் உன்னை ஸம்ஹாரம் செய்ய வந்துள்ளேன்
, அது தெரிந்தும் கூட நீ எதற்காக சிரிக்கின்றாய்? என்றுகேட்டான்.
அப்பொழுது கோமாதா சொன்னது. நான் எப்பொழுதும் மாமிசத்தை உண்டதில்லை. ஆனாலும் என் மரணம் மிகவும் கோரமாக இருக்கப் போகிறது.
எந்த தப்பும் செய்யாமல்
, யாருக்கும் எத்தகைய ஆபத்தையும் விளைவிக்காத என்னை, நீ கொன்று, என் மாமிசத்தை சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு கோரமாக இருக்குமோ என்று நினைத்து நான் சிரித்தேன்.
பால் கொடுத்து உங்களை வளர்த்தேன். உங்கள் பிள்ளைளுக்கு பால் கொடுக்கிறேன்.
ஆனால் நான் சாப்பிடுவது புல்லை மட்டுமே. பாலிலிருந்து வெண்ணை எடுத்தீர்கள். வெண்ணையினால் நெய்யை செய்தீர்கள்.
என்னுடைய சாணத்தினால் வறட்டி செய்துசமையலுக்கு உபயோகித்தீர்கள்.
அதே போல் என்னுடைய சாணத்தினால் எருவினை தயார் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தீனீர்கள்.
அந்த பணத்தினால் இன்பமான் வாழ்க்கையை வாழ்கிறீர்கள். ஆனால் எனக்கு மட்டும்
அழுகிப் போன காய்றிளையும் காய்ந்து போன புல்லையும் தந்தீர்கள்.
என்னுடைய சாணத்தினால் கோபர் கேஸ் தயார் செய்து கொண்டு உங்கள் வீட்டை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தீர்கள்.
ஆனால் என்னை கசாப்புக்காரன் போல் கொல்ல வந்திருக்கிறாய்... என்னுடைய
பாலிலிருந்து கிடைத்த சக்தியினால் தான் என்னை கொல்ல ஆயுதத்தை தூக்க முடிந்தது.
அந்த ஆயுதத்தை தூக்கும் சக்தி உனக்கு கிடைத்தது என்னால் தான்.
என் மூலம் நிறைய சம்பாதித்து வீட்டை கட்டிக் கொண்டாய். ஆனால் என்னை மட்டும் ஒரு குடிசையில் வைத்தாய்.
உன்னை பெற்ற தாயை விட மேலாக உனக்கு அண்டையாக இருந்தேன்.
ஸ்ரீக்ருஷ்ண பகவானிற்கு ப்ரீதியானவள் நான்.
எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கும் உன் கதி என்னவாகும்
?
உன் வருங்காலத்தை குறித்து நினைத்து நான் சிரித்தேன் என்று சொன்னது.


 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top