அருமையான பதிவு சவீதா.கனகவேலுக்கு தான் செய்தது தவறு என புரியலையா.
விஸ்வா வீட்டை விட்டு சென்றதனால் தான் பிரச்சனை,கார்த்திக்,சரவணனால் தான் சென்றான் என நினைக்கிறாரே தவிர தன் தவறை ஒப்புக் கொள்ளவில்லையே மனுசனா இவன்.
இத்தனை நாட்கள் அப்பா அப்பா என்ற அங்கயற்கண்ணி சொத்து பிரச்சனை வரவும் அண்ணன், மருமகன்களுக்கு ஆதரவாக பேசறார்.இதில் மகள்கள் தங்கள் கணவர்களுக்கு ஆதரவாக
பேசவில்லை என்ற குறை.
அன்பு அவமானம்,கௌரவம்,சுயநலம் எல்லாம் பார்க்காது,தவறு தன்மீது இருக்கும் போது காஞ்சனாவினால் அதைப் பற்றி நினைக்கவும் முடியவில்லை.அவள் நினைவெல்லாம் விஷ்வா மீது தான்.விஷ்வா ஓவரா தான் நடந்துக்கறான்.
சங்கவி ஒரு வழியா விஜய் காதலை புரிஞ்சுகிட்டா,காஞ்சனாவை பேசியதற்க்கு மன்னிப்பும் கேட்டுட்டா.