மல்லிகா,
இது தான் உங்கள் கதைக்கு நான் எழுதும் முதல் விமர்சனம். சுந்தரி.... திக்கு தெரியாமல் வாழ்க்கையின் விளிம்பு நிலையில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும்(ஏன் ஆணுக்கும் கூட) நம்பிக்கை தரும் ஒளி. அவள் ஒரு முன்னோடி. எந்த நிலையிலும் தளராமல் நேர்மையாக , கடுமையாக உழைத்தால், நாம் இழந்த சொர்க்கம் கூட, நம் வாசலில் தவம் இருக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
கண்ணனைக்கூட தன் வேரை நோக்கி நம்பிக்கையுடன் வரவைத்து வாழவைத்தது சுந்தரியின் உழைப்பும் அவள் மண்ணின் மீது கொண்ட இனம்புரியாத பந்தமும் தான். அவனுக்குள் ஓரி பொறி இருந்தாலும் இதை தீபமாக எரிய வைத்தது சுந்தரி தான்.
அவளின், நிமிர்வு, உறுதி, தன்னம்பிக்கை, ........ what a woman!! She is a total inspiration.
இப்படி ஒரு கதாப்பாத்திரத்தை வடிவமைத்து, ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் சுந்தரியை நினைவுப்படுத்தியமைக்கு நன்றிகள் கோடி.