E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

Lakshmi sivakumar

Well-Known Member
ஈஷ்வர் அதீத காதலினால் தான் அவளை வெறுக்க முடியவில்லை.ஆம் வேறு ஒருவராக இருந்திருந்தால் அவளை வெறுத்தது மட்டுமில்லாமல் குடும்பத்தின் முன் அவமானபடுத்தி இருப்பர்.
கண்டிப்பாக ஈஷ்வரை தவிர யாரை அவள் திருமணம் செய்திருந்தாலும் அவளுக்கு தனிமையை தவிர வேறு பிரச்சினை இருந்திருந்தாலும் அவள் போதையை நாடி இருப்பாள்.
ஆண்கள் எல்லாரும் தப்பு செய்தாலும் மனைவி இப்படி என்னும்போது அதை அவர்களால் ஏற்க முடியாது அவர்கள் காதலே கொண்டிருந்தால் கூட.
ஆனால் ஈஷ்வர் விதிவிலக்கு. அவளை யாரிடமும் கீழிறக்காமல் அவளை மீட்டு தன் உயிரையே அவள் மீது வைத்திருக்கிறான்.தப்பு செய்தால் கூட எத்தனை ஆண்கள் ஒத்து கொள்கிறார்கள்.
வர்ஷினி இவ்விஷயத்தில் மிகக் கொடுத்து வைத்தவள்.
இந்த மாதிரி அசாதாரண சமயங்களில் துணை நிற்பவனே துணைவன். ஈஷ்வர் மிக மிக நல்ல துணைவன்.அது தான் மாஸ் HERO.
 

krish

Member
அஸ்வினை வர்ஷினிக்காக ஏற்றுக்கொள்கிறான்............

முடிக்கப்பட்ட ஒரு காதல் வர்ஷினியை வாழவைக்கிறது........... drug எடுத்துக்கொள்கிறாள் என்று விலகி செல்லாமல் அவளை பிரிந்து செல்ல அனுமதித்து அவளை அந்த பழக்கத்திலிருந்து மீட்டு வந்திருக்கிறான்.............

பிரிவுக்கு முன் தனிமைக்கு மருந்து Drugs..............

அதற்க்கு பின்னர் தனிமைக்கு மருந்து ஈஸ்வர்............. அவனை divorce............ போய்டுவேன்........... என்ற இரண்டு வார்த்தைகளால் கொல்கிறாள்...........

இதுவும் கடந்து போகும்னு சொல்ற மாதிரி அவளை அவள் வழியிலே சென்று மீட்டிருக்கிறான்.........

ஈஸ்வர் என்னும் மனிதனை சந்திக்காமல் இருந்திருந்தால் அவள் அப்பா இருக்கும் வரை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டிருக்கமாட்டாள்.......... அவளுடைய brothers அவளிடம் பேசுவதற்கு பயந்து இதை பற்றி பேசியிருக்க மாட்டார்கள்....... இப்போ கூட எதாவது hostel/PG-ல் தனிமையாகவே இருந்திருப்பாள்............

Esh உடனான திருமணத்திற்கே அவ்வளவு ஆர்ப்பாட்டம்........... அவன் தப்பா நடந்த பிறகும் கூட அவனிடம் நன்றாகத்தான் பேசினாள்........ அவள் அம்மாவை பற்றி தெரிந்த முதல் வெளிநபர் ஈஸ்வர் தான்.........

Mam........... Varsh பார்வையில்...........
ஈஸ்வர் என்னும் மனிதனை சந்திக்காமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்........ அது அப்போ.......

இப்போ உங்க கூட சண்டைக்கு வருவாள்....... எப்படி என்னோட ஈஸ்வரை அப்படி சொல்லலாம் என்று.........
ஈஸ்வர் இல்லை என்றால் வர்ஷினி இல்லை......... அது இப்போ.......

வர்ஷினியை சிதைத்தது இருவரும் (EshVarsh) தான்......... மேலும் சிதையாமல் காத்தது ஈஸ்வர் மட்டும் தான்..........
Superb explanation...

I too have same thoughts.
 

malar02

Well-Known Member
இல்லை ஹாஸ்டல் friends எடுக்கும் பொது தப்பு என்று சொல்வாள்
ஈஸ்வர் தவறாக நடந்தபின் முதல் முறை அவள் நட்புகள் தொடர்பில் இல்லாத போது எடுப்பாள்

அப்ப (hostalil) அவளுக்கு அந்த பழக்கம் இல்லை
padinga epi 60-69

appuram ungalukku puriyum why Malli said
உண்மையில் ஈஸ்வர் என்ற மனிதனை சந்திக்காமல் வேறு யாரையாவது திருமணம் செய்து இருந்தால் வர்ஷினி நன்றாக இருந்து இருப்பாள்.
இந்த பழக்க வழக்கமும் அவளுக்கு வந்து இருக்காது
சூப்பர் சிந்து நான் இப்பதான் எந்த எபி யில் படித்தேன் என்று தேடி கொண்டிருந்தேன் அவருக்கு(bro ) சொல்ல
 

malar02

Well-Known Member
சகோதரி அவள் ஒரு முறை சொல்வாள் ஹாஸ்டலில் இந்த பழக்கம் வந்தது என்று, மனபுழுக்கதினால்
தவறான கணிப்பு bro பின்பும் ( (சொல்லலாம் அல்லவா ....வேண்டாம் என்றால் சொல்லிவிடுங்கள்... நோ பிராப்லெம் )
 

malar02

Well-Known Member
Hi......MM....

இது எபி. 93-94 க்கான பொதுவானதாகும் ....

இரண்டிலும், flash back சொல்லப்பட்டு இருக்கின்றது...
ஒன்று, அஷ்வினின் பார்வையில், மற்றது ஈஷ்வரின் பார்வையில்...
இரண்டு பழைய நிகழ்வுகளும் மனதை உருக்கும் ,கனமான
நிகழ்வுகள்.....அதில் எந்த வித கருத்து வேறுபாடுகளும் கிடையாது...


ஆனால் அதை சொல்லிய நடை,விதம்,or style whatever may be...
அது மல்லிக்கே உரித்தான, நடையில் சொல்லப்பட்டுள்ளது இருக்கின்றது...


Past and present correlation .....in one episode...
நாயக,நாயகின் இரு வேறு மனநிலைகளை
ஒரே பதிவில் படம், பிடித்து காண்பிக்கப்பட்டுள்ளது...

அன்று கர்வம், மமதை,திமிர், கொண்ட ஈஷ்வர்.....
விரல் சொடுக்கி அஷவினை கூப்பிட்டு மிரட்டியவன்..
ரஞ்சிக்காக அடித்து வீழ்த்தியவன்...
அவளுக்கான நேரம் கொடுக்காமல் பணத்தை துரத்திக் கொண்டு ஓடியவன்...
வர்ஷியின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்தவன்
அவளின் நுட்பமான மன உணர்வுகளை புரிந்துக் கொள்ள தவறியவன்..
மொத்ததில் தன் தவறுகளால் ,தன் வாழ்வை,
தன் நேசித்த பெண்ணைத் தொலைத்தவன்....


இன்று....

பொறுமையாக ,அவளுக்காக நான்கு மணி
நேரம் காத்திருக்கிறான்......
அஷவினுடன் இணைந்து,வர்ஷியை கேலி செய்கிறான்...
தனக்கும்,வர்ஷினிக்கும் இடையில் யாரும் வரக்கூடாது
என்று நினைத்தவன்,
அஷவின் காலத்தால் செய்த உதவிக்கு
தன்எதிரி என்பதையும் மறந்து அவனை ஏற்றுக் கொள்கிறான்...
வர்ஷ் ,அஷ்வின் நட்பை மதிக்கிறான் .....

வரஷினியிடம் தன் சுயங்களைத் தொலைத்து
ஒரு இயல்பான உறவை உருவாக்கி கொள்கிறான் ....
தன்னையும் மீட்டு, தான் உயிருக்கு உயிராக காதலிக்கும்
மனைவியையும் மீட்டு விடுகிறான்....




வர்ஷினி ....அன்று...இன்று தொடரும் அடுத்த கமெண்டில்....
thumb_crop.php
 

fathima.ar

Well-Known Member
ஈஷ்வர் அதீத காதலினால் தான் அவளை வெறுக்க முடியவில்லை.ஆம் வேறு ஒருவராக இருந்திருந்தால் அவளை வெறுத்தது மட்டுமில்லாமல் குடும்பத்தின் முன் அவமானபடுத்தி இருப்பர்.
கண்டிப்பாக ஈஷ்வரை தவிர யாரை அவள் திருமணம் செய்திருந்தாலும் அவளுக்கு தனிமையை தவிர வேறு பிரச்சினை இருந்திருந்தாலும் அவள் போதையை நாடி இருப்பாள்.
ஆண்கள் எல்லாரும் தப்பு செய்தாலும் மனைவி இப்படி என்னும்போது அதை அவர்களால் ஏற்க முடியாது அவர்கள் காதலே கொண்டிருந்தால் கூட.
ஆனால் ஈஷ்வர் விதிவிலக்கு. அவளை யாரிடமும் கீழிறக்காமல் அவளை மீட்டு தன் உயிரையே அவள் மீது வைத்திருக்கிறான்.தப்பு செய்தால் கூட எத்தனை ஆண்கள் ஒத்து கொள்கிறார்கள்.
வர்ஷினி இவ்விஷயத்தில் மிகக் கொடுத்து வைத்தவள்.
இந்த மாதிரி அசாதாரண சமயங்களில் துணை நிற்பவனே துணைவன். ஈஷ்வர் மிக மிக நல்ல துணைவன்.அது தான் மாஸ் HERO.


அவன் செய்த ஒரு தவறு திருமணத்திற்கு காரணமானாலும்..
அவன் செய்த மற்றொரு தவறு
பிரிவுக்கு வழிவகுத்தாலும்..
இந்த பதிவு...
இதுல வர்ஷினிய தப்பு சொல்லாததே
அவனோட தீவிர காதல புரியவைக்குது..

But this stand is for readers thaan..
Rendu epi Ku munnadi varsh flattered..
 

MythiliManivannan

Well-Known Member
கனமான பதிவாய் தொடங்கி, இறகைப்போல முடிச்சிருக்கீங்க மல்லி:)

கடைசிப் பக்கத்தையும் நிகழ்காலத்தையும் வைத்து சொல்லலும்னா மிக மிக இனிமையான பதிவு:)


நன்றி மல்லி:)
 

MythiliManivannan

Well-Known Member
விஸ்வாவையும், மாடல் வர்ஷாவையும் சேர்த்து யாரோ போட்டோ எடுக்குறாங்க..
நியூஸ் பேப்பர்ல போடுறாங்க..
அஸ்வின் போய் வர்ஷாட்ட சண்டை போடுறான்...
அப்புறம் அந்த மேனேஜர் தான் காரணம்னு தெரிஞ்சி மன்னிப்பு கேட்கிறான்.. :cool:
அப்புறம்.. அப்புறம்.. அப்புறமே... :D:p
க.கு வேகமா ஓடுது போல மலர்;) ஆனாலும் நல்லா இருக்கு:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top