banumathi jayaraman
Well-Known Member
அருமை, வெகு அருமையான கருத்துக்கள்,ஏன் என்ன என்று அவளுக்காக யோசிப்பவர்கள் யார் ??? என்று வர்ஷினி நினைப்பதாக எபிசொட் 84 இல் வருது .....
அது தான் அவளோட குறை ..... நமக்குன்னு யோசிக்கிறவங்க இல்லை ..... நம்மை நாமே பார்த்துக்கணும்னு .......
இதுவரை அவள் தான் மறைமுகமா எல்லோரையும் பார்த்துக்கறா.... ஈஸ்வர் தனக்கு செய்த தப்பை தன் தந்தை இடம்
இருந்து மறைத்து அவனுடைய தொழில் காப்பாற்றினாள்..... பிறகு திருமணம் செய்து அவனை காப்பாற்றினாள் ......
தாத்தா சொன்னபடி அண்ணன்கள் தொழிலை தான் தலையிடாமல்
ஒரு வகையில் அவர்களையும் ......அப்புறம் அஸ்வின் ..... இப்போது சஞ்சய் காதல் ......
ஐஸ்வர்யா நிறைவான மன வாழ்க்கைக்கும் காரணமாக போகிறாள் ......
அவளுக்கு ...அவளுக்காக மட்டுமே என்று எல்லோரும் என்ன செய்ய போகிறார்கள் ????....
அவள் சுயம்பு தான் ....தன்னை தானே உருவாக்கி கொண்டவள் தான் ....
இல்லை என்று சொல்லவில்லை .....அவளுக்காக மற்றவர்கள் ஏதேனும் செய்யும் சந்தர்ப்பம் வருமா?????
சுந்தரம்உமா டியர்