E79 Sangeetha Jaathi Mullai

Advertisement

S

semao

Guest
விஷ்வா :
நான் நானில்லை
நீ இருக்கும்போது
மட்டுமல்ல
இல்லாதபோதும் தான்


கண்ணில் விழுந்த நான்
உன்னில் நுழைந்தேன்
என நினைத்து
விண்ணில் பறந்தேன் அன்று
உன் சொல்லில்
மண்ணில் வீழ்ந்தேன் இன்று


என் சொல்ல என் காதல்
என்னவென சொல்ல
வன்சொல்லே வேண்டாம்டி


மறக்க வேண்டாம்
காதலை மறைக்கவும் வேண்டாம்
மன்னிப்பும் வேண்டாம்
முன் போன கதை அல்ல
இன்று உள்ள கதை இதுவே
உன்னிப்பாய் பார்த்திருந்தால்
என் எண்ணம்
உன் வண்ணம் என புரியும்
என் மனம் மாறாது
அது உன்னை தாண்டி போகாது


வர்ஷினி :
வந்தாய் என்னை தேடி
தந்தாய் ஒரு உலகம்
அதில் நான் முழுகும் நேரம்
சென்றாய் என்னை விட்டு


என் சொல்வேன்
என் எண்ணம் என் சொல்வேன்
சொன்னால் சரியோ முறையோ
பெண்ணை பிறந்தால்
இது தான் குறையோ


சொல்ல முடியாமல்
அதை வெல்லவும் முடியாமல்
வேண்டாமென தள்ளவும் முடியாமல்
மீட்கவே மறக்கவே
மருந்துண்டேன்
அதில் தொலைந்தேன்


வந்தாய் நீ உன்னை மீட்ட பின்
என்னை மீட்க தேடுகிறேன்
என்னை மீட்டு
உன்னை கரை சேர்க்க வா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top