Lalithaganesan
Well-Known Member
அருமையான பதிவு மல்லி.
அருமையான பாடல், தங்கமலர் டியர்சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
பால் மணக்கும் பருவத்திலே
உன்னைப் போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே
பித்துப் போல் படுத்திருந்தேன்
அன்னாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா
ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி
தேவன் தந்த தெய்வமொழி
Hi mam
கண்ணன் சுய அலசல் முடிந்து மீண்டும் மீண்டு வந்துவிட்டார்,இவ்வளவு நாளும் மனசுக்குத்தெரியும் தனக்கு ஒரு பிள்ளை இருக்கின்றது என்பது,ஆனால் கண்ணால் கண்ட பின்தான் பாசம் ஊற்றெடுக்குமோ,எப்படி மனதில் வலியை இல்லாமல் ,ஒருவித நிமிர்வுடன் சுந்தரியிடம் உனக்கு மட்டுமா மகன் எனக்கும் மகன்தானே என்று கூறமுடியும்,அப்போ விவாகரத்து செய்யும்போது மட்டும் அபராஜிதன் அவர் மகன் இல்லையா,ஊரார் எல்லாம் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது என்று மிக இலகுவாக அறிவுரை கூறுகின்றனர்,ஆனால் அந்தப்பிடிவாதம்தான் வலிகளையும் அவமானத்தையும் ஏளனத்தையும் தாங்கவைத்து,குழந்தையை பெற்றெடுத்து ,நல்படியாக அன்போடு வளர்து,தன்சொத்தை பாதுகாத்து,அதனை ஒன்றுக்கு நாலாக பெருக்கி,வேலைவாய்ப்பு கொடுத்து மிகச்சிறந்த ஒரு பெண்ணாக மாற்றியது,இந்த ஊரும் உலகமும் இவ்வளவு நாளும் ஏன் கைகொடுக்வில்லை,அது என்னமோ தெரியவில்லை ஒரு பிரச்சனையென்று வரும்போது நம்சமூகம் உடனே தண்டனையோ அறிவுரையோ ஏளனமோ அல்லது ஏதாவது மனது நோகச்செய்வதோ அதை பெண்களிடமிருந்துதான் ஆரம்பிப்பார்கள்,அந்தப்பெண்ணின்மேல் பிழை இல்லாவிட்டாலும்கூட,என்ன செய்வது சுந்தரிக்கு கண்ணனின் நடவடிக்கைகளை பார்க்கும்போது மேலும்மேலும் கோபம்தான் கூடுகின்றது.இனி கண்ணனின் நடவடிக்கை என்னவாக இருக்குமோ தெரியவில்லை,கெஞ்சலா மிரட்டலா பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி
Aravin22
No no Kannan Pantruthu onum sare kidaiyathu.Here comes the 7 th episode of Nee Enbathu Yaathenil
EPISODE 7
பொன்ஸ் என் பின்னாடி இருக்கீங்களா
செமபடம் சகோதரி,வாழ்கைக்படகு நான் தேடிக்கொண்டுஇருக்கும்படம்,ஜெமினி,தேவிகா நடித்தபடம்,வாசன் தயாரிப்பு.சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
பால் மணக்கும் பருவத்திலே
உன்னைப் போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே
பித்துப் போல் படுத்திருந்தேன்
அன்னாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா
ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி
தேவன் தந்த தெய்வமொழி
ஆமா சின்ராசுக்கு ஏதோ உள் நோக்கம் இருக்கு...துரை வந்துட்டார்..
சுந்தரி வலி தந்த அழுத்தம்...பிடிவாதம் புரியுது.
துரையின் பரிமாணம்...சூப்பர்..
அந்த சின்னராசு வை ஒரு அப்பு வச்சிருக்கலாம்....