hi friend MM
சுந்தரி ...நெஞ்சில் உரம் இருந்தாலும் நெஞ்சின் ஓரமாய் ஒருவலி ஒரு நமைச்சல்
நினைவலையிலும் தன்னிலை இழக்காமல் பேச்சு சுவரஸ்யமாய்
அவன் அம்மா விழுந்தற்க்கும் இவனே காரணமோ என்று நினைக்கும் அளவுக்கு கடுப்பு
தான் தப்பித்துவிட்ட்தாக வேற ஒரு நினைப்பு ............
கண்ணன் .....பாவம் நோஸ்கட் வாங்கணும்னே நேர்த்திக்கடன் இருப்பது போல் வந்துவிட்டான் வந்து வாங்கியும் கட்டிக்கொண்டான்........ எங்கேடா நாம் இரண்டு வார்த்தை அதிகமாக பேசினால் மண்ணிலே வேலை செய்து உரமேறி கை இரண்டு அப்பு அப்பிட போராளோனு பயந்துட்டானோ .....புரியுது தன் தவறு ஆனா........ அவளா புள்ளிவச்சா தான் தான் கோலமிட முடியும் தெரியலை ராசாக்கு.......... புள்ளையை பார்க்கணும் சொல்ல கூட தயக்கம் (உள்ளவன் எப்படித்தான் கரைசேர போறானோ)
ஏற்கனவே கணவன் ஒருவன் என்ன அவசியத்துக்கு என்று வாழ்ந்து கொண்டிருக்கிறாள்
வாழ்க்கையில் தனித்து இருக்கும் பெண்களை ஏய்த்து விடவே இந்த உலகம் நினைக்கும் எப்போதும் நிஜத்திலும்
அதற்கு தான் பாரதி சின்ன பாப்பாவாக இருக்கும்போதே தெரிந்து கொள் என்று பாடெழுதி வைத்துவிட்டு போயிருக்கிறான்
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!
சுந்தரியும் ஸ்கூலில் இதை படிச்சு இருப்பா