சஹானாவை நல்லா புரிஞ்சு வச்சிருக்கும் சுதர்சனின் பேச்சு அருமை. சஹானா எத்தனை முறை திரும்ப திரும்ப இது பொய் கல்யாணம்னு சொன்னாலும் சுதர்சனுக்கு அது நிஜமான கல்யாணம்னு அவர் வார்த்தை செயல் மூலம் சொல்லிகிட்டே இருக்கார். சஹானா அதை எப்ப புரிஞ்சுக்குவா. ரெண்டுபேருக்கும் இடைல மெல்ல உருவாகும் தோழமையான பாசப்பிணைப்பு அழகு.