அன்பரசி இப்ப தன் பிள்ளைகளுக்கு பொருத்தமா துணை தேடுவதை விட தன்னோட இலவச மருத்துவமனை நிர்வாகத்துக்கு தான் பொருத்தமான ஆள்கள் தேடுற மாதிரி இருக்கு. கீர்த்தி இப்பவும் சரியாக தான் கணிக்கறா அவளோட தம்பியை.
பிரவாகன் முழுக்க முழுக்க தன் அப்பாவோட பிரதி போல இருக்கே. இதெல்லாம் அன்பரசிக்கு புரியாதா? பாவம் விஷ்ணுவும் மலரும்.
விஷ்ணுக்கு பிரவாகனால மட்டும் தான் பிரச்சனைன்னா பரவாயில்லை. இந்த மிர்ணி பொண்ணும் தன் பங்குக்கு கண்டிஷன்ஸ் என்கிற பெயர்ல அவனை படுத்தாமல் இருக்கணும்.
மலர் பிராவாக்கு குடுக்கற பதிலடி எல்லாமே சூப்பர். இருந்தாலும் இந்த முறை அவ இதை தவிர்த்திருக்கலாம் என்று தோணுது. முதல் முறை reflexive reaction கொடுத்தது சரி தான். ஆனால் மறுபடியும் இந்த மூடன்கிட்ட வாயாடாமல் இருந்திருக்கலாம். அந்த மூடன் இவ பயந்துட்டதா நினச்சா தான் என்ன?
தமன் யாரு?