தெய்வங்களே.. நீங்கள் வாழ்க.. நின் குலம் வாழ்க.. நின் கொற்றம் வாழ்க.. அப்டியே எல்லோரும் மீன் நண்டு ரெசிபி லாம் போடுங்க... புண்ணியமா போகும்
நண்டு.....
அமாவாசை பௌர்ணமிக்கு நண்டு நல்லா இருக்காதுன்னு சொல்வாங்க..... சென்னை நண்டு எப்போ புடிச்சதுன்னே தெரியாது...... நாங்கள் நண்டு சமையல் ஊரில் மட்டும் தான்......
நண்டு கொஞ்சம் பெருசா இருந்தால் நல்லாயிருக்கும்.......
நண்டை பக்கவாட்டில் பிடித்து உடைத்து நல்லா clean பண்ணிக்கோங்க....... கால்களை தனியாக உடைத்தெடுத்து அதையும் கழுவி வைத்து கொள்ளவும்....... கழுவிய பின் நண்டு body நடுவில் பிடித்து உடைத்தால் ரெண்டாகா வரும்......
தாளித்து இஞ்சி பூண்டு paste சிறிது போட்டு வதக்கவும்....... வதங்கியதும் பொடியாக cut பண்ணின தக்காளி உப்பு மஞ்சள் பொடி மிளகாய் பொடி கொஞ்சம் தனியா பொடி சேர்த்து வதக்கவும்....... பின் நண்டு போட்டு கொஞ்சம் கிளறி மூடி போட்டு 5 min வேகவிடவும்..... கடைசியில் மையாக அரைத்த தேங்காய் விழுது or கொஞ்சம் கெட்டி தேங்காய் பால் சிக்கன் மசாலா பொடி சிறிது..... மல்லி புதினா சர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்......
Gravy consistency உங்கள் தேவைக்கு பார்த்து கொள்ளவும்.......
சிக்கன் மசாலா பொடி......
Main items...... சோம்பு குழல் பட்டை கசகசா
சிறிதளவு...... ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை கருஞ்சீரகம் அண்ணாச்சி மொக்கு ஜாதி பத்ரி தற்கோலம் ஜாதிக்காய் கடல் பாசி சீரகம்
நன்றாக வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளவும்.......
All nonveg except மீன் items..... potato curry..... முட்டை குழம்பு..... தக்காளி சாதம்...... all பிரியாணி...... கடலை கறி.....
இதெற்கெல்லாம் use பண்ணலாம்......