பாட்டு இல்லக்கா...பெருமை சொல்லுங்க...சாப்பாடு....கோவில்....இடம்
....கத...personalities appadi
Sry
தவறாக புரிந்து கொண்டு விட்டேன்
நாகை special::
1.திவ்ய தேசங்களில் ஒன்றான நாகை செளந்தரராஜன் பெருமாள் கோவில்
இது 18 வது திவ்ய தேசம் .தாயார் செளந்தரவல்லி . விஷ்ணு துர்க்கை சன்னதியில் உண்டு.
1.a) நாகை நீலாயதாட்சி கோயில்
இங்கு மரகத்தால் ஆன லிங்கம் உண்டு.ஆனால் சில கயவர்களால் அது களவாடப்பட்டு விட்டது.அதற்கு பதிலாக புதிதாக லிங்கம் உள்ளது.
அதற்கு பெயர் விடங்கர்.அவர்க்கு சாய் ரஷ்சையில் பூஜை உண்டு.மிகவும் விஷேசம்.இது பெரிய கோயில்.
2. நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில்.
இது சுயம்புவாக தோன்றி உள்ள அம்பாள்.(இப்ப தான் மே 12 ஆம் தேதி முடிந்தது)
இங்கு செடில் உற்சவம் நடைபெறும்.
இது வேற எந்த கோவில்களிலும்
இல்லை.
3.சிக்கல் சிங்காரவேலர் கோயில்
இங்கு மூலவருக்கு உற்சவறும் ஒன்றாக இருப்பது தனி சிறப்பு.
பார்வதி தேவி முருகனுக்கு வேல் கோடுத்த இடம்.
இங்கு இருந்து தான் முருகன் வேல் வாங்கி சுரபத்மனை வதம் செய்ய முற்படுவார்.
வேல் வாங்கும் தினத்தன்று முருகனுக்கு தொடர்ந்து வேர்த்து கொண்டே இருக்கும்.
பட்டு வத்திரம் கொண்டு ஒற்றி எடுக்க படும்.இங்குள்ள அம்பாள் பெயர் வேல்நெடுங்கன்னி.
இங்கு பெருமாள் சன்னதியும் உண்டு.ஆதலால் இது சைவ வைணவ திருத்தலங்களில் ஒன்று.
4. பொரவச்சேரி முருகன் கோயில்
ஒரே கல்லில் ஆன சிற்பம்.
முருகர் கையில் இருக்கும் நரம்பு கூட தத்ரூபமாக வடிவமைப்பு பெற்று இருக்கும்.இங்கு நரசிம்மர் உண்டு.
5.வேளாண்கன்னி
இங்கு பிரசித்தி பெற்ற மாதா கோயில் உள்ளது.
இது ஒரு பெரிய சுற்றுலா தலம்.
மாதா கோயிலில் ஜூலை கடைசியில் அல்லது ஆகஸ்ட்டில் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் திருவிழா நடைபெறும்.
6.நாகூர் ஆண்டவர் கோயில்
இதுவும் சுற்றுலா தலம் ஆகும்.
இங்கு மிகவும் பிரபலம் இங்கு விற்கப்படும் குலாப் ஜாமுன் மற்றும் பால் கோவா.தம்ரூட் கூட கிடைக்கும்.
இன்னும் இன்னும் கோயில்கள் உள்ளன.அதை பற்றி மேலும் அறிந்து பதிவிடுகிறேன்.