ஓ! நீங்களும் படித்திருக்கிறீர்களா? ரொம்ப சந்தோஷமா இருக்கு சிஸ் உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைக்க!
சூர்யோதயம் படிச்சிட்டு நீங்க எல்லோரும் ரொம்பவே பீல் பண்ணதுல எனக்கும் வருத்தம்தான்! நிறைய பேர் சொன்னாங்க. நிலாத் தோழி மாதிரி ஒரு கதை எழுதினவங்க ஏன் இப்படி ஒரு கதை எழுதினாங்கன்னு?! எனக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது! எல்லோரையும் இப்படி கஷ்டப் படுத்திட்டோமேன்னு!
வாசகர்கள் எல்லோரும் சந்தோஷமான கதைகளைத்தான் எதிர்பார்க்கிறாங்க.. அவங்க விருப்பமும் தப்பில்லை! ஏன்னா மைன்ட் ரிலாக்ஸ் காகத்தான் அவங்களும் கதை படிக்கிறாங்க.
ஆனா நிஜங்கள் எப்பவும் இனிமையானதா அமைந்துவிடுவது இல்லை சிஸ்.. சின்ன வயசுல நான் கூட பல குடும்ப நாவல்கள்ல வர்ற கதாநாயகர்கள் போல கணவன்கள் எல்லாம் அப்படித் தாங்குவாங்க நினைச்சிருக்கேன்! ஹாஹா...!!
ஆனா அதெல்லாம் கற்பனை உலகம்னு வளர்ந்த பிறகுதான் புரிஞ்சது!
சொ இப்படியும் கணவன்கள் இருக்கிறார்கள் என்று புரிய வைக்கவும், எவ்வளவு துன்பம் வந்தாலும் கடந்து வர வேண்டும் என்பதற்காகவும் எழுதியதுதான் சூர்யோதயம்!
நிலாத் தோழியும், வயல்வெளிக் கவிதைகளும் உங்களுக்குப் பிடிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் சிஸ்....தாங்க் யூ வெரி மச் சிஸ்......