என்ன சொல்ல?
ஏது சொல்ல-ன்னு ஒண்ணுமே
புரியலைப்பா, மல்லிகா டியர்
யாரோ? எவரோ?
கதைதானே-ன்னு
விட முடியாமல், இதெல்லாம்
நம் சொந்தக்காரப் பையனுக்கு
நடப்பது போல ஒரு உணர்வு,
ஒரு சொந்தம்,
ஒரு ஆற்றாமை
ஐயோ? நம்ம திருப் பையன்
இப்படி இருக்கிறானே-ன்னு
நேற்றிலிருந்து ஒரே கவலையா
இருக்குப்பா
மீனாக்ஷியை விட,
குழந்தையாக திரு,
இருக்கிறானேப்பா?
துளசியே தன்னை வந்து
பார்த்துக்கணும்,
தன்னைத் தேடி வரணும்-ன்னு
அதென்ன, அப்படி
ஒரு பிடிவாதம்,
திருநீர்வண்ணனுக்கு?
இவன் மகளும், இவனைப்
போலவே பிடிவாதம்
துளசி-தான் பாவம்
இவங்க இரண்டு பேருக்கும்
நடுவிலே மாட்டிக்கிட்டு
முழிக்கிறாள்
இதுக்கு நடுவிலே,
மசக்கை வேற?
வீட்டிலே அத்தனையையும்
பொறுப்பா பார்க்கிறதாலே
அவளுக்கு உறக்கம்,
வேற, வந்திடுது
இவன், திருநீர்வண்ணன்
சாமக்கோழி மாதிரி,
ஊரடங்கின பின்னே வந்தால் புள்ளைத்தாச்சி துளசி,
கண்ணு முழிச்சிருந்து
இவனைக் கொஞ்சமாச்சும்
கொஞ்சணும்-னு எக்ஸ்பெக்ட்டு
பண்ணுறான்
அதை, அந்த எக்ஸூபெக்ட்ட, பொஞ்சாதியிடம்,
இந்த திருப் பையன்
கொஞ்சூண்டு தன்மையா
சொல்லப்படாதோ?
அடிக்க வர்ற மாதிரி
பேசினால்,
புள்ளையாண்டிருக்கிற
பொண்ணு பயந்துட
மாட்டாளோ,
மல்லிகா டியர்?