மிகவும் அருமையான பதிவு,
ஆதிலக்ஷ்மி டியர்
நறுமுகை ரொம்பவும் பாவம்தான்
இஷ்டமாவே ஏமாந்திருக்கிறாள்
ஒன்பது வருஷம் கழித்து அவனைப் பார்த்தப்போவே வீட்டு சாவியை மறந்தவள் முன்னாடி இவள் கூடவே இருந்து அவன் ஏமாற்றியதை எப்படி தெரிந்திருப்பாள்?
சசிசேகரன் திட்டம் போட்டு ஏமாற்றியிருக்கிறான் படுபாவி
அப்போ ஆரவ்வுக்கும் வித்யுத்துக்கும் இரண்டு மூன்று மாதங்கள்தான் வித்தியாசமா?
நறுமுகையிடம் நாளைக்கு சசி என்ன பேசப் போறான்?
என்ன பிரச்சனைன்னு எதுக்கு சொல்லுயூஷன் சொல்லப் போறான்?
ஆரவ்வுக்கும் அம்மாவா இருன்னு சொல்லுவானோ?
அப்போ இவாஞ்சலின் இல்லையா?
இறந்து விட்டாளா?
இல்லையென்றால் வித்யுத்தை தன்னிடம் ஒப்படைக்கக் கேட்பானோ?
எது எப்படியோ நல்ல அழகான வாசனையான பெண் என்ற அர்த்தத்தை நான் சொன்ன மாதிரியே இளிச்சவாய்ன்னு சசி சொல்லிட்டானே
இந்த அப்டேட்டிலும் ஆதிலக்ஷ்மிதான் இந்த நாவலின் ரைட்டர்ன்னு இன்னும் ஸ்ட்ராங்கா உறுதியாகுதுப்பா
இதில் ரங்கேஸ்வர் நிலைமைதான் ரொம்பவே பரிதாபம்
பெற்ற ஒரே பெண்ணுக்கு அளவற்ற சுதந்திரம் கொடுத்து ஓவரா நம்பிக்கை வைச்சதுக்கு வல்லி நல்ல பரிசு கொடுத்து விட்டாள்
பின்னே கல்யாணம்ன்னு ஒரு அங்கீகாரம் இல்லாமல் லிவிங் டுகெதர் வாழ்ந்தேன்னு சொல்லி வயிற்றில் பிள்ளையோடு வந்தால் எந்த பெற்றோர்தான் சந்தோஷப்படுவாங்க?
வாரியலாலேதான் நல்லா சாத்துவாங்க