Naan Ini Nee - Precap 39

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
அப்படியிருக்க மற்றது எல்லாம் சரி, ஆனால் இவர்கள் உடன் இருப்பது போல் வந்துச் செல்ல, எரிச்சலாகிப் போனது. கண்டிப்பாக இது தீபனின் வேலை என்பது நன்கு தெரியும். என்னைக் கேட்காமல் எப்படி இதனை செய்யலாம் என்ற எண்ணம் வர,

“என்னை சேப்டி பண்ணிக்க எனக்குத் தெரியும்..” என்று அனுராகா இறுகிய குரலில் சொல்ல, இரட்டையர்கள் இருவரும் பதிலே சொல்லாதிருக்க,

“இதெல்லாம் உங்க பாஸ் கிட்ட மட்டும் வச்சுக்கோங்க.. தீபனே சொன்னா கூட என்னோட பெர்மிசன் இல்லாம இதெல்லாம் நீங்க பண்ண கூடாது மைன்ட் இட்..” என, அவர்கள் அதனை சட்டை செய்வதாய் இல்லை.

“சோ.. என்னை இப்படி ஹோல்ட் பண்றதுதான் உங்களோட ப்ளான் சி யா??” என்று அனுராகா கேட்க, நாகா திரும்பி அவளைப் பார்த்தவன்,

“அதுவும்...” என்றுமட்டும் சொல்லிவிட்டு திரும்ப..

“******* இடியட்**** ” என்று அவளுக்கு தெரிந்த ஆங்கில கெட்ட வார்த்தைகள் எல்லாம் அவளின் வாயில் இருந்து வர, முன் சீட்டினில் இருந்த இருவரும் எவ்வித முக மாற்றமும் இல்லாது அமர்ந்திருந்தனர்.

--------------------------

“டோன்ட் யூ ஹேவ் எனி சென்ஸ்... இந்த மர்டர் நடந்ததா சொல்ற அந்த டேட்ல தீபன் என்னோடதான் இருந்தான்னு சொன்னா உங்களுக்கு அதோட ஆக்சுவல் மீனிங் புரியாதா??” என்று அனுராகா வெகுண்டு கேட்க,

“மேம்.. இதை நீங்க இப்படியொரு நியூஸ் வந்ததுமே சொல்லிருக்கலாமே..” என்றனர் பேட்டியாளர்கள்.

“இஸ் இட்.. ஒரே நாள்ல கேஸ் முடிஞ்சிருக்கும் அப்படின்னு சொல்ல வர்றீங்களா??!!”

“அப்படியில்ல.. ஆனா இவ்வளோ நாள் டிலே பண்ணது சாட்சிகளை மாற்றன்னு எடுத்தக்கலாம் இல்லையா??” என்று அடுத்து ஒரு கேள்வி வர,

“ஓ..!! அப்போ தீபன் தான் அந்த கொலை செஞ்சான்னு நீங்க நேர்ல பார்த்தீங்களா??!!” என்றாள் அனுராகாவும்..
----------------------------------

“தீபன் சொல்றத கேளு.. ஒன் டைம் அந்த பொண்ண போயி பாருடா...” என்று சக்ரவர்த்தியே சொல்லிவிட்டார்.

“ப்பா ப்ளீஸ்.. எனக்கு இருக்க கோபத்துக்கு நான் ...” என்றவன் “ப்ளீஸ் ப்பா.. கொஞ்ச நாள் போகட்டும்..” என,

“இல்லடா இது தப்பு.. கல்யாண தேதி குறிச்சாச்சு.. இதுக்கு மேலயும் இப்படி ரெண்டுபேரும் இருந்தீங்கன்னா அது சரியில்ல.. இதுக்குமுன்ன எப்படியோ.. இனி அப்படி இருக்கக் கூடாது...” என்று சக்ரவர்த்தி பொறுமையாய் எடுத்து சொல்ல,

“இப்படி அவ பண்ணிட கூடாதுன்னு நினைச்சேன் ப்பா..” என்றான் வலி நிறைந்த குரலில்.

“நாங்க யாருமே கூட நினைக்கலதான்.. ஆனா அவ ஏன் அப்படி பண்ணா யோசி.. உனக்காகத்தானே.. அப்போ நீயே அந்த கிரெடிட் அவளுக்கு கொடுக்கலன்னா எப்படி??!!” என, தீபன் சோர்ந்து போனான்..

அவளைப் எப்படி நேர் காணுவேன் என்று...!!
 

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன பண்ணினா ராகா???
போட்டோஸ் காட்டிட்டாளா???

breakup party இன்னுமா முடியல........
See you after a short commercial break மாதிரி அப்பப்போ ஆகுதே........
என்ன பண்ணலாம் :unsure::unsure::unsure:
கல்யாண டேட் கூட fix பண்ணிட்டாங்க.........
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
ஏண்டாப்பா நாகா and தர்மா?
அவ என்ன உங்களுக்கு பூப்போட்டு லட்சார்ச்சனையா பண்ணுறா?
இப்படி கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கீங்களே
திட்டுறாப்பா
உங்களை ராகா ராகம் பாடுறாப்பா
என் இனிய இரட்டையர்களே
இந்த சால்ட்டு சால்ட்டுன்னு ஒண்ணு சாப்பாட்டுல போட்டு சாப்பிடும் பழக்கமிருக்கா, மை டியர் டுவின்ஸ்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top