E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
நல்லதுக்கே,சகோதரி இங்கு நீங்கள் இன்னும் என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்ற பாடல் போடுங்கள் ,பொருத்தமாக இருக்கும்
அது ஏற்கனவே பதிவு செய்து விட்டோம், சகோ...
 

ThangaMalar

Well-Known Member
முடி
கடி
அடி
விஷ்வாக்கு வர்ஷினியால் வழங்கப்படும்
இனிமையான தண்டனை
அல்லது
கடினமான காதல்.
சூப்பர் ஹேமா...
கடினமே கரும்பு, விஸ்வாக்கு
 

MythiliManivannan

Well-Known Member
ON BEHALF OF FATHIMA
I AM POSTING THIS
WRITEN BY FATIMA
(TAMIL TYPING ONLY I DID)
PURELY OF HER DEDICATION


உன்னை கண்டநாள் முதல் .
பித்தனாய் ஆனதால் ..

என் வாழ்வு உன்னோடு ..

உன்னை தெரிந்தும் நான்
உன் தலைவனாக விரும்பியதால்
தலைவியின் நாயகன் ..

உன்னை கரம் பிடிக்க
உன்னுடன் நடந்ததே

சத்தமில்லாமல் ஒரு யுத்தம் .

கனவில் உன் முகம்
மட்டுமல்ல ..
நினைவெல்லாம் உன் முகம் மட்டும் தான் ..


நீல விழிகளில் ஏற்படும் அச்சம் தவிப்பு ..

உன் பார்வை நானறிவேன் ..

பூவை நெஞ்சமே
நீதானே தாலாட்டும் நிலவு
..

வரம் தரும் வசந்தமே..
என் காதலில்
வீழ்வேனென்று நினைத்தாயோ ..

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாய்

உன் நினைவுகள் ..

பக்கம் வந்து
ஊமை நெஞ்சின்

வேதனை தீர்த்திடு கொஞ்சம் ..

புயல்களை தாங்காது நெஞ்சம் ..

தென்றலை வந்து தீண்டும் போது ..

காதலும் கற்று மறக்க வேண்டாம் ...
உன்னை காதலிக்க கற்றுக்கொடு
என வேண்டும்
இப்படிக்கு உன் இதயம் ..


ஒரு வானவில் போல
வந்து செல்லாதே..

வானம் தொடாத மேகமாக வேண்டாம் ..

சங்கீத ஜாதி முல்லை மலர..
நீ என்பது யாதெனில் ..
இரு இதயம் ஒன்றாகி
நான் உனக்கானவன் என்ற எண்ணம்
உன்னை உணர செய்யும் நாளாகும்
⁠⁠⁠⁠
Excellent Fathima:)
 

malar02

Well-Known Member
ஈஷ்வர் வெளிப்படுத்திய உணர்வுகளைத் பற்றி
தனியாக எழுத வேண்டும் என்று இருந்தேன்...

நீங்களே மிக அழகாக,சொல்லிவிட்டீர்கள்....


"உன்னை பற்றி மட்டும் நினைத்தேன்...
உன் எண்ணங்களை பற்றி நினைக்கவில்லை...."
அவளைப் பற்றிய தன் உணர்வுகளை முதல் முறையாக
அவளிடம் பகிர்ந்துக் கொள்கிறான்...
இது ஆரம்பம் என்றுதான் தோன்றுகிறது...


எனக்கு கேள்விகள் இருக்கு,பூவிழி...

'Obsession" பற்றி அவன் தன்மனக் கதவை
திறக்க வரும் பொழுது,
அவனை சொல்ல விடாமல் தடுப்பது ஏன்????


புது வீட்டில் ,அவள் பார்க்காத,அவன்
தற்சமயம் காட்ட விரும்பாத பகுதி....?
மல்லியின் special hint அது என்று தோன்றுகிறது ...

எபிசோட் முடிவில்,மறுபடியும்
ஒரு முக்கோண சந்திப்பு....
நிகழுமா.....


தன்னை ஏமாற்றியதற்கு மட்டுமில்லாமல்,
'அந்த' பெண்ணை ஏமாற்றியதற்காகவும்
கோபம் கொள்ளும் வர்ஷ்,
அந்த பெண்,ஐஷ்தான் என்று அறியும் நிலை வருமா???


இருவருக்குமிடையே ,temporary truce
என்று மல்லி குறிப்பிட்டு இருந்தார்கள் ...
அதை முடிவுக்கு கொண்டு வரும் காரணமாக
ஐஷ் வருகை இருக்குமோ.....?
அவளுக்கு எப்படி அவனின் முதலில் காதல் என்று declare பண்ணிய பெண்ணை பற்றி தெரிய வந்தது என்ற மர்மம் இன்னும் அவிழ்க்க படவில்லையே எனக்கும் இந்த கேள்வி வந்ததுவிட்டு போனது ஆனாலும் இந்த எபியில் அவளின் செய்கையில் பின்னுக்கு போய்விட்ட்ன .........

இன்செக்குரிட்டி யாக உள்ளுக்குள் உணர்கிறாள் அவளே சொல்கிறாள் தன் நிலையை அதனால் அவன் மேற்கொண்டு ஏதவாது சொன்னால் இந்த கணம் உடைந்து போகுமோ என்று மனபயம் தோன்றி இருக்கலாம்.......

புதிய வீட்டின் பகுதி அவள் வேலை சம்பந்தமானதாக இருக்கலாம்.....

ஓஓ...ஐஸ் என்று தெரிந்து இருக்காதா இருக்கும் தெரிந்திருந்தால் அஸ்வினிடம் இவ்வளவு குளோஸ் ஆகி இருக்க வாய்பில்லையோ...... ரொம்பவே டிவிஸ்ட் வச்சிடாங்க MM

எனோ ஈஷை நியாப்படுத்தனும் அவனின்இப்போதயை நிலையையும் காண்பிக்க வேண்டும் இவள் மேல் கொண்ட காதலை முழுமையாக உணர்த்த வேண்டும்என்று அவனின் கண்ணீர் சைலண்டாக வலிதாங்குதல் அவளையும் என்று இந்த எபியில் கொடுத்து இருக்காங்க சுபமான முடிவை நோக்கி போகணுமென்று........

ஆனாலும் வரஷ் மற்றோரு பெண்ணை ஏமாற்றியதை தங்கி கொள்ள முடியாது ஏத்துக்க முடியாதுனு சொல்கிறாள் இன்னும் பிரச்சனைகளின் லிஸ்ட் இருக்கு என்கிறாள் இன்னும் மனதிற்குள் ஓடும் வார் முடியவில்லைஅவளின் தற்போதைய அதீதமான தனிமை இந்த எபியில் அவளே அவளை சமாதானம் செய்து கொள்ள நிலைப்பாடாக இருக்க வேண்டும்

so இது ஒரு temporary truce ஆகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்
மேலும் cat out of the bag ப்பார்ப்போம் MM மர்மத்திற்கு என்ன பதில் கொடுக்க போகிறார்கள் என்று
 

Joher

Well-Known Member
Mam, என்ன எழுதுறதுன்னே தெரியல............ அப்படி ஒரு epi............ யாருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டது............ very pathetic condition..................

ரெண்டு பேருமே பாவம்............. யாருக்கும் எதுவும் தெரியவிடாமல் Esh அவளை பார்த்துக்கொள்ளும் குணம் வேறு யாரிடமுமே இருக்காது........ Esh முன்னர் ஒரு dosa epi-யில் சொல்வது போல் யாரிடமும் அவள் கீழிறங்கும் நிலைக்கு வரவிடவில்லை..........

இப்பவும் அப்பாவையும் Esh-யும் தவிர வேறு யாரையுமே அவள் நினைக்கவும் இல்லை........ நெருங்கவும் இல்லை............. கண்டிப்பாக Esh-ஐ விட அவள் தான் அதிகமாக அவனை love பண்ணுகிறாள்........... express பண்ண முடியவில்லை அவன் செய்துவைத்திருக்கும் சில வேலைகளால்...............

Esh is the best choice for Varsh.......... இதுவே அவளை மாற்றும் ஆயுதம் என்று நினைக்கிறன்............

அடுத்தடுத்த epis படித்தால் தான் தெரியும்.............

வீட்டில் பார்க்காத இடம்............ something special forher........... அப்படின்னா அவள் அம்மா அப்பா Photo/Art இதுமாதிரி எதாவது என்று நினைக்கிறேன்............ அதில் அவளும் சேர்ந்து இருக்கலாம்........... அது தான் அவளுக்கு மிகவும் பிடித்தது....................
May be, அவர்களின் special BR??????????? But the possibilities are very less...............

But இந்த epi போல் MM என்ன வைத்திருக்கிறார்கள் என்று யாருக்கு தெரியும்......

பாட்டு...........;););););););););););););););););););););)

உன்னை என்னி முள் விரித்து படுக்கவும் பழகிக்கொண்டேன்
என்னில் யாவும் கல் எறிந்தால் சிரிக்கவும் பழகிக்கொண்டேன்
உள்ளத்தை மறைத்தேன் உயிர்வலி பொறுத்தேன் என்
சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்

அன்பே அன்பே நீ பிரிந்தால் கண்களில் மழை வருமே
காற்றினை கை விடுமே விதை அழிந்து செடி வருமே
சிற்பிகள் உடைத்த பின்னே முத்துக்கள் கைவருமே
காதல் ராஜா ஒன்றை கொடுத்தால் என்னொன்றில் உயிர் வருமே
உன்னை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் காதலில் சுகம் வருமே
அஸ்தமனமெல்லாம் நிறந்தறம் அல்ல
மேற்கினில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்
 

ThangaMalar

Well-Known Member
:) சிஸ் இப்படி ஒரு பதிவு படிச்சவுடன் தூக்கம் பறந்துவிட்டது...நீங்களும் நானும் நேரம் பிரச்சனை இல்லை....
ஆனால் இந்திய நேரத்தில் நடு இரவில் படித்து கமண்ட் கவிதை போடுறாங்க நம் தோழிகள்.
மல்லிகாவின் SJM க்காக எத்தனை நாள் வேண்டுமானாலும் விழித்திருக்கலாம், மேகா... :cool:
 

MythiliManivannan

Well-Known Member
ஈஸ்வர் வர்ஷினியே நினைத்து எழுதிய கவிதை

என் மனதை
ஆட்டிவைக்க!!
எங்கிருந்து
வந்தாயடி !!
எண்ணம் அதை திருடிக்கொள்ள !!
என்ன மாயம் செய்தாயடி
!!
உனை நான் நினைக்கையிலே !!
உள்ளந்தனில்
ஊற்றெடுக்கும் ;;
உன்மத்த நீரும் அதை !!
உடனே நான் உண்கின்றேன் !!
அன்பால் நீ ஆணை இட்டாய் !!
அரவணைப்பைத்தருகின்றாய் !!
ஆறுதலும் ஆகின்றாய் !!
ஆன்மா உடன்
கலக்கின்றாய் !!
எண்ணந்தனில்
நிற்கின்றாய் !!
எழுத்தாகி
வருகின்றாய் !!
என்னுள் உயிராய் ஓடுகின்றாய் !!
ஏற்றத்தைத்தருகின்றாய் !!
எண்ண எண்ண இனிக்குதடி !!
எடுக்க
எடுக்க நிறையுதடி !!
உந்தன் நினைப்பு உள்ளவரை :
உயிரே !!!
என்னை விலகாது
அருமை:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top