malar02
Well-Known Member
உண்மை, உண்மைகாயம் பட்ட மனது சொல்வதினால் அவனை விலக்கி வைக்கிறாள்....
விலகிப் போகிறாள்.....கோபத்தினால் அல்ல....
அவன் தொட்டவுடன் கரைந்தவள் தான்....
அதுவும் அதித ஈடுபாட்டுடன்....
விலகியிருந்த நாட்களிலும் அவனை தேடியவள்தான்...
தன்னை தப்பான பெண்ணாக நடத்தினான்
தான் தப்பானவள் தான் என்ற எண்ணம் அவள் மனதில்
ஏற்படுத்திய ரணத்தை அவள் சரி செய்யவே
அவனை தவிர்க்கிறாள்...
அவன் அருகாமையில்,அவள் இளகிப் போனாலும்,
தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வதால்
தான் தப்பான பெண் இல்லை என்று
தனக்கு தானே நிருப்பித்துக் கொள்வதன்
மூலம் தன் மனக்காயத்தை ஆற்றிக்கொள்கிறாளோ?
தான் ஒரு பலகீனமான பெண் இல்லை,
மிகுந்த மனவலிமை கொண்ட பெண்ணாக
தன்னை மாற்றிக்கொள்கிறாளோ????
ஆனா விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையே மெல்லிய கோடுதான் அல்லவா அவளுக்கு இருக்கும் தலையாய பிரச்சனை உரிமை என்ற மூன்றெழுத்தில் தான் என்று நினைக்கிறேன்