ரொம்ப, ரொம்ப அழகான, அருமையான, லவ்லி UD, மல்லி செல்லம்,
இப்போதான் வர்ஷி இந்தியாவில் வந்து இறங்கியிருக்கா!
இன்னும், ஈஸ்வர் கூடவே இவள், இன்னும் சரியாக பேசலை
கணவனும், மனைவியிடம் இன்னும் சரியாக பேசலை
அதுக்குள்ள இந்த சொந்தங்களுக்கு வர்ஷியிடம், பார்க்க, பேச என்ன அவசரம்?
அவள்தான் ஈஸ்வரைத்தவிர, வேற யாருமே வேணாம்ன்னு, இருக்காளே!
அவளை ஏன் பா இவங்க எல்லோரும் தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்காங்க?
இந்த மலர் அம்மா, எப்போ மாமியாரா மாறினாங்க?
வர்ஷி, மீது முன்னே, இவங்களுக்கு இருந்த பாசம், எங்கே போச்சு?
இப்போ, பொண்ணுதான் இவங்களுக்கு, முக்கியமா போய்ட்டால்ல!
இவங்க, எல்லோரும் இப்பவே வந்து, வர்ஷியை பார்க்கலை=ன்னு, யாரு அழுதா?
வர்ஷி, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன பின்னே, சாவகாசமா இவர்களெல்லாம், வந்திருக்கலாம்,
வீணாக வர்ஷியை, அழ வைச்சுட்டாங்களே இந்த மலரம்மா!
அது எப்படிப்பா, அந்த நீலக்கண்களைப்பார்த்தவுடன் அசட்டுத்தனங்கள் போகும்? அவ்வளவு சக்தியா, வர்ஷியோட நீலக்கண்களுக்கு?
அவளுக்கு தனிமையும் பிடிக்கலை, யாரோடவும் ஒட்டவும் முடியலை
ஒரு பக்கம், ஐயோ, இவங்களெல்லாம் சேர்ந்து, சந்தோசமா இருக்காங்க, நாம மட்டும் தனியாதானே இருக்கோம், என்ற ஒரு பரிதவிப்பு, கழிவிரக்கம்
ஹ்ம்ம்......... வர்ஷி ரொம்பவே பாவப்பட்ட ஜென்மம் ப்பா
குழந்தைகளிடம், கல்மிஷம் இல்லை, கபடு இல்லை,
குழந்தைகள், பெரியவங்க போல, அவங்க எந்த பிரச்னையும் பண்ணுறதில்லை அதனாலே, அவங்களிடம் மட்டும் ஈஷ்வர் பேசினால், அது கூட இந்த மலரம்மாவுக்கு பொறுக்கலையா?
குழந்தைகளை வரச்சொல்லி, வர்ஷி சொன்னால், இவங்க, ரஞ்சனி வரணும்-னு பிளாக்மெயில் பண்ணுவாங்களா?
எனக்கு, இப்போதைய, மலரம்மாவை பிடிக்கலை, மல்லி டியர்
ஹ்ம்ம்.... இந்த ரஞ்சனிக்கு வெகு பகுமானம்தான்
இவளுக்கு, பிடிக்கலைன்னா அஷ்வினை யாரும் கூட சேர்த்துக்கக்கூடாதா?
அஷ்வின் கூட யாரும் பழகக்கூடாதா?
வர்ஷிக்கு, அஷ்வின், நல்லவனா தெரியறான், அவள் பழகுகிறாள், வேலை கொடுக்கிறாள், இவளுக்கு என்ன வந்தது?
இவளை கேட்டுத்தான் எல்லாம் செய்ய வேண்டுமா?
இவள், யாரைக்கேட்டு, என்னவெல்லாம் செய்தாளாம்?
இந்த ரஞ்சனிக்கு, அஸ்வினை சமாளிக்க தெரியாமல், இவளாகப் போய் பத்மநாபனை, தன்னிஷ்டத்துக்கு கல்யாணம் செய்த, இவளெல்லாம், வர்ஷியை பற்றி பேசக்கூடாது, Malli dear
SHE HAS NO RIGHTS FOR THAT
இவளுக்கு, ஷாலினி எவ்வளவோ தேவலை
மூன்றரை வருடத்தில், இவளுக்கு ஒன்பது மாத குழந்தை-தான்,
இந்த வக்கீல் பத்துவுக்கு திறமை போதாது
வர்ஷியே, இப்போதான், தனிமை வெறுத்துப்போய், ஈஸ்வரிடம் வந்திருக்கிறாள் இவளை, யாரும், எதுவும் பேசிக்காயப்படுத்திடக்கூடாதே, என்ற கவலைதான் எனக்கு மல்லி செல்லம்
இந்த மலரம்மாவுக்கு, அப்படியே பொண்ணைப்போலவே, எதுக்கு, எல்லாத்திலயும் இப்பிடி ஒரு அவசரம்?
வர்ஷிக்கு, இப்போதைய தேவை, இவங்க யாரும் இல்லை
அந்த குழந்தைகள், மற்றும் ஈஸ்வர் தான்
முன்னே ஒரு சமயம், போனது போல, இப்போவும் அவங்களை தனியாக விடுங்க, மல்லி டியர்
ரஞ்சனியின் குழந்தையை, மலரம்மா சமாதானம் செய்யும்பொழுது, வர்ஷினியின் ஏக்கத்தில், என் மனம் விண்டு போனது, மல்லி செல்லம்
முரளி, தேவையில்லாமல் வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக் கொள்ளுகிறான் ஷாலினியே, கவலைப்படலை, இவனுக்கு என்ன?
அப்பாடா, இப்போவாவது ஈஸ்வருக்கு, அவள் குழந்தை என்று தோன்றியதே
ஹா, ஹா, இவன் தியாகியா?
இந்த வருடத்தின் மிகப் பெரிய தமாஷ், இதுதான்
முரளி, பத்து, ஜெகன், ஏன், நமசிவாயம் கூட மலரம்மாவை தாங்குகிறார் இவங்களெல்லாம், பெண்டாட்டியைப் பார்க்கணும், அவளோடு அனுசரித்து போகணும்,
அதையே, ஈஸ்வரன், வர்ஷியை, தாஜா செய்தால், அனுசரித்து போனால்,
தியாகியா?
என்னய்யா, உலகம் இது?
யாருக்கும் சொல்லாமல், எங்கோ சர்ச்சில், போய் உட்கார்ந்து கொண்ட ரஞ்சனி நல்லவள்
அடுத்தவளை காதலித்து, இவளை மணந்து கொண்டு, அந்த காதலை தன்னை நம்பிய மனைவியிடம், சொல்லாமல் விட்டால், எந்த மனைவிக்கும் கோபம் வரும்?
வர்ஷிக்கு மட்டும் கோபம் வரக்கூடாதா?
அவளோட கோபத்தை சமாளித்து;வர்ஷியை;சமாதானம் பண்ணவேண்டியது ஈஸ்வரின் வேலை; மற்றும்
கணவனாக; அவனோட கடமை
நீங்க எப்படி சங்கீத ஜாதி முல்லையை; காணவில்லை=ன்னு,
சொல்லலாம் மல்லி டியர்?
அந்த, சங்கீத ஜாதி முல்லை, அங்கேயே தான் இருக்கிறது
கண்டுபிடிக்க வேண்டியது, கண்டு,முல்லையின் மணத்தை, மணம் வீசச்செய்ய வேண்டியது, நம்ம மாஸ் ஹீரோ விஷ்வேஷ்வரனோட திறமைதான், மல்லி செல்லம்
WAITING FOR YOUR NEXT LOVELY UD MY SWEETEST MALLI DEAR