E2 Nee Enbathu Yaathenil

Advertisement

Manga

Well-Known Member
திருமணமாகி 5 நாளில் பிரிவு
அந்த வீட்டில் நடந்தவைகளும்
வெறுப்பு ஏற்பட காரணம் ஆனது
இதில் அவள் மனதில் அவன் என்ன
தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்?

அவனால் தன் வாழ்வு வறண்டுவிட்டது
என்பதைக் குறித்தே சொல்லியிருக்கலாம்

பாலைவனத்தில் பட்டு ரோஜா
பயிரிடமுடியாது.
கருகித்தான் போகும்
சுந்தரியின் சந்தோஷத்தை உறிஞ்சும் சீமை கருவேல மரமாக துரை இப்போ இருந்தாலும் பின்னர் அவளை பாதுகாக்கும் வேலியாக கண்ணன் மாறலாமில்லையா?Two in one malli mam??
 

malar02

Well-Known Member
கண்ணன்:
என்றன் மண் வேண்டாம் அங்கே நீ இருப்பதால்
உன் குடும்பம் வேண்டாம் உன்னுடன் சேர்ந்தவராதலால்
உன்னுடன் வாழ்ந்த வாழ்க்கை வேண்டாம்
என்னால் வந்த நம் வாரிசு இதுவரை வேண்டாம்
என்றன் தந்தையும் வேண்டாம் நின்னை ஆதரிப்பதால்
என்றன் தாயும் வேண்டாம் நின்னை வெறுப்பதால்
என்றன் சுற்றமும் வேண்டாம் நின்புகழ் பாடுவதால்

சுந்தரி :
மணம் செய்வித்தது தந்தையின் தவறு
பிழையென பேசியது உன் தாயின் தவறு
மங்கையை ஆண்டது உன் தவறு
மரபை கூறாதது சுற்றத்தின் தவறு
இதில் என் பிழை எங்கே
தந்தை சொல் கேட்டது தவறா
கல்வியை நிறுத்தியதா
கட்டியவன் விருப்பத்தை மதித்தது தவறா
எங்கே சறுக்கியது என் வாழ்க்கை

என் மண்ணை விட்டால் மண வாழ்வு வருமா
மண்ணை விட்டு பொன்னை தேட சொன்னாயே
அந்த பொன்னே இந்த மண்ணில் தான் இருக்கிறது
134750351.jpg
 

malar02

Well-Known Member
சின்ன கண்ணனும் பெரிய கண்ணனும் சந்திக்க போகும் வேளையை ஆவலுடன் எதிர்பார்திருக்கின்றோம் மல்லி.

சுந்தரி என்கிற பெயர் பிடிக்கவில்லையா ஹீரோவுக்கு? ஒருவேளை 'சொப்பன சுந்தரின்னு' வச்சிருந்தா பிடிச்சிருக்குமோ?:oops: வா ராசா வா 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடின்னு' அவ பின்னாடியே அலையப்போற பாரு;)

சொப்பன சுந்தரியாதான் ஆகா போறா ஆனா சொப்பனத்தில் எந்த உருவத்தில் வரப்போறாளோ குத்தவா...வெட்டவா அல்லது மல்லிப்பூவைத்த மோகினியாகவோ தெரியலையே
 

malar02

Well-Known Member
(ஹி....ஹி.... உங்கள் முன்னுரையின்
தொடர்ச்சி.....கூட ஒரு இருக்கலாம்....
நமது முன்னோர்களாகவும் இருக்கலாம்)

மனம்ஒரு குரங்கு...
மனித மனம் ஒரு குரங்கு...
தாவு,தப்பித்து ஓடு....ஆனால்....
உன்னில் இருக்கும்
என்னை தொலைத்து விடாதே.....
நான்,நானாக இருக்க விடு....
சரியா மல்லி.....?????
1148ca84-d51f-4a5c-ab26-6159e6a5fc7c-100-100.jpg


கண்ணுக்கெட்டிய தூரம் வரை
'R' factor ஏ கண்ணில் படவில்லை....
ரொம்ப dry subject ஆ,மல்லி.....:D
Poor,poor guys......:p:D


எபி3 க்காக காத்திருக்கிறேன்.....
 

malar02

Well-Known Member
சீமை கருவேலம் கடின தன்மையுடையதுதான்....

அதனால்,தனக்கு எந்த பயனும் இல்லை என்ற
கருத்தில் கூறியிருப்பாளோ.......:oops:

இருக்கலாம்.... நிலைமை அப்ப அப்படி இருந்து இருக்கு .....பயன் இல்லை என்றாலும் அது ஆக்ரமித்து கொள்கிறதே நிலத்தை
 

malar02

Well-Known Member
Hi mam

நன்றாக இருந்தது mam,கண்ணனுக்கு இபோதுதான் வயதுக்குரிய அறிவு & முதிற்ச்சி வந்திருக்கும்,அத்தோடு குழந்தைபற்றிய நினைவும் தெரிந்ததிலிருந்து இப்போது வரை அலைகழிக்குமல்லவா,தானாடாவிட்டாலும் தன்தசை ஆடும் என்பார்களே அதே போல் தன்பிள்ளைபற்றிய எண்ணம் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் ,இப்போது இன்னும் வளர்ந்து உலகனுபவமும் சேரந்தவுடன் கடந்தகாலத்தை நினைக்கும்போது ,தன்னுடைய தவறை விளங்கிக்கொண்டுள்ளார்,விவாகரத்து கோரும்போது அப்பெண்ணுடன் வாழவில்லையென்றால் நிறைய சட்டசிக்கல்& காலதாமதம் ஆகலாம்,அதனால்தான் கண்ணன் அப்படி நடந்திருக்கவேண்டுமென்று நினைக்கின்றேன்,ஒன்று மட்டும் உறுதி மீண்டும் சுந்தரியுடனும் குழந்தையுடனும் கண்ணன் சேர்வது என்றால் கண்ணன் சூடு சுரணை காதுகேளாமை வாய்பேசாமை இது எல்லாம் இருந்தால்தான் சுந்தரியின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்,ஏனெனில் மல்லிகா mam இன் நாயகிகள் எப்போதுமே ஒருவித திமிர் & கர்வம் உள்ள நாயகிகள்தான்,அடம் பண்ணத்தொடங்கினார்கள் என்றால் அவர் பேச்சை அவரே கேட்கமாட்டார்,
245y2q345y.jpg
என்னமோ பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி
Aravin22
 

fathima.ar

Well-Known Member
தோல்வியின் தாக்கத்தை மறைத்து
நிமிரந்து நிற்பதா
புதுமையும் புரட்சியும்..

அடக்கமும் வெட்கமும்
மட்டும் பெண்மையின்
குணமல்ல..
ஒழுக்கமும் நேர்மையும்
கற்று கொடுக்க
வேண்டும்..

தோல்வியுற்ற திருமண வாழ்வா
பாரதி கண்ட
புதுமை பெண்ணை உருவாக்குவது....
முண்டாசு கவிஞனின்
கனவுக்கே இழுக்கு..

வெற்றி பெறும் திருமண வாழ்வு மட்டுமல்ல நம் இனத்தின் இலக்கு..
நல்ல குடும்பம் மட்டுமல்ல..
நல்ல சமுதாயமும்..
பெண்களாகிய நம் கையில்..

வாருங்கள் நம் போராட்ட களத்தை
நோக்கி....
உருவாக்குவோம் புதிய
தமிழகம்..
மீட்டு வருவோம் அதன் புனிதத்தை..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top