Alaigal

Advertisement

Sundaramuma

Well-Known Member
அலைகள்

விலையில்லாக் கண்காட்சி நான்
வீட்டை விட்டு வாராயோ எனைக் காண
வீடு கூட்டிச் செல்வாயா உனைத் தொடர்வேன்
கரைத் தேடி வந்து விட்டேன்
கரைத் தாண்ட இயலவில்லை
ஆனாலும் விடமாட்டேன்
தொடர்ந்தே நான் முயன்றிடுவேன்
முயற்சிதனைத் தொடர்ந்திட்டால்
பேரலையாய் வந்திடுவேன்
ஆழிபேரலையாய் வந்திடுவேன்
நான் உனக்குச் சொல்வதெல்லாம்
முயற்சிதனைக் கலந்திட்டு
அயற்சியின்றிப் போராடு
சந்தேகம் வேண்டாமே
சலிப்பற்ற உழைப்பு கொண்டால்
வெற்றி எனும் பேரலையே
உன்னை வந்து சேர்ந்து விடும்
வீண் எண்ணம் தவிர்த்து விடு
வீழாமல் எழுந்து விடு


-:)மீரா :)

hands-clapping-applause-smiley-emoticon.gif Super Meera
 

Devi29

Well-Known Member
சிறு உளி சிலை வடிக்கும், உங்கள் கவிதை மனதில் தன்னம்பிக்கை அலையை உண்டாக்கும் அருமையான கவிதை sis
upload_2018-1-10_9-37-52.jpeg
 

Attachments

  • upload_2018-1-10_9-37-32.jpeg
    upload_2018-1-10_9-37-32.jpeg
    6.8 KB · Views: 1
S

semao

Guest
சகோதரி, ஒரு சின்ன சந்தேகம், சாரி சகோ . அழிபேராலை - அழிவு. ஆனால் விடாமுயற்சி - உயர்வு . கவிஞர்கள், கவிதைகள் என்றும் எதிர் மறை சொல் பேசாகூடாது . இது இந்த சகோதரனின் அன்பு வேண்டுகோள்.( ரெடி, ம் ம் ம் ஆரம்பிக்கட்டும் எனக்கு டின் கட்டும் வேலை }
@murugesanlaxmi
அண்ணா
நான் கூறியது ஆழி
அழி அல்ல
ஆழி என்பதன் ஒரு பொருள் கடல்
கடலில் உள் இந்த பேரலையானது அடக்கி ஆழ்ந்து உள்ளது
அது போல் நம் ஒவ்வொருவருக்கும் நல்ல நேர்மறை எண்ணங்கள் ஆழ்ந்துள்ளது
அதை வெளி கொண்டு வருவது நமது செயலில் உள்ளது
அதை தான் நான் சொல்லிருக்கேன்
முயற்சி கொண்டால் பேரலையாக வெற்றி வரும் ன்னு
கடல் அதிர்வு கொண்டால் ஆழிபேரலை வரும்
நம் மனம் அதிர அசைய ஒரு சிறு பதிவு (அதிர்வு) இதுவாக இருக்கட்டும்
 

murugesanlaxmi

Well-Known Member
@murugesanlaxmi
அண்ணா
நான் கூறியது ஆழி
அழி அல்ல
ஆழி என்பதன் ஒரு பொருள் கடல்
கடலில் உள் இந்த பேரலையானது அடக்கி ஆழ்ந்து உள்ளது
அது போல் நம் ஒவ்வொருவருக்கும் நல்ல நேர்மறை எண்ணங்கள் ஆழ்ந்துள்ளது
அதை வெளி கொண்டு வருவது நமது செயலில் உள்ளது
அதை தான் நான் சொல்லிருக்கேன்
முயற்சி கொண்டால் பேரலையாக வெற்றி வரும் ன்னு
கடல் அதிர்வு கொண்டால் ஆழிபேரலை வரும்
நம் மனம் அதிர அசைய ஒரு சிறு பதிவு (அதிர்வு) இதுவாக இருக்கட்டும்
ஓ,சூப்பர் சகோ,(கடைசியில் எனக்கு பல்பா)
 

Sundaramuma

Well-Known Member
உமா, இன்னொரு கவிதை இருக்கு, பாருங்க..
பேசும் தெய்வம் ன்னு..
அது இன்னும் சூப்பர்...
இனி தான் பார்க்கணும் ...நிறைய படிக்கவே இல்லை .....
ஒன்னு ஒண்ணா படிக்கணும் ....:D
 

Sundaramuma

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top