“இந்தியாவில்
எத்தனையோ
பிரச்சனை எந்நாளும்
வீற்றிருக்க
தீர்த்திட வழி இன்றி
திக்கி அரசு நிற்க
திக்கெங்கும் தோரணம்
அந்திய நாட்டின்
அதிபரை
ஆரவாரமாய் வரவேற்க”
“பாதுகாப்பிற்கு
பல கோடி
செலவு செய்து
பத்திரமாய்
பார்க்கும்
அவசியம்
அவர்க்கு என்ன
மனிதர்களுக்கு
நடுவே
மண்ணில் பிறந்த
ஓர் மனிதன்
வந்து போக
வண்டிவண்டியாய்
சோதனைகள்
நடத்தி
வேடிக்கை காட்டிடும்
விந்தை என்ன”
“தமிழனின்
வரலாற்றுச்சின்னம்
எல்லாம்
தாங்கிபிடிக்க
தோள் கேட்டதோ
தூணாய் துணை நிற்க
படை திரட்டி
பரிவாரங்கள் புடை சூழ
வருகிறாரோ
அவருக்கு
வரவேற்பு நிகழ்கிறதோ”
“கடலில்
மீன் பிடித்து
கால் வயிற்று
கஞ்சி குடிக்கும்
மீனவனை
செல்லாதே
கடல் அன்னையிடம்
நான்
அறிவிப்பு
விடும் வரை
என்றாயே
அநியாயம் இதுவென
அறியவில்லையோ நீ”
“உயிர் மேல்
பயம் கொண்டு
பல கோடிகளில்
பாதுகாப்புத்தேடி
பாமரனின் வாழ்வில்
பசி தீர்த்து
கொள்ளவதற்கு
பதில்
பத்திரமாய்
இருக்கலாமே
நம் பத்துமாடி
கட்டிடத்தில்”
“நாடு செல்லும்
நிலை கண்டு
நரம்பெல்லாம்
துடிக்கிறது
என்ன செய்ய
அதிகாரம்
அங்கு ஆக்கிரமித்திருக்கிறதே
வாளேந்தி போராட
வலு இல்லை
சொல் ஏந்தி நிற்கிறேன்
சொல்லியதில்
ஏதேனும் பிழையா என
சொல்லுங்கள்
சகாக்களே”