மௌனமாய் எரிகிறேன் 13

Advertisement

Surya Palanivel

Well-Known Member
We are all bad in someone's story ல..
சேஷா அப்பா , அமிர்தா case திருப்பி open பன்னுவேன் னு சொல்றாங்க பாட்டி.. இத பத்தி தேவா க்கு தெரியுமோ?
 

உதயா

Well-Known Member
தேவா பாவமில்லையா???? அவபக்கமும் நியாயம் இருக்கலாம்..... தேவா பேசினால் தான் உண்மை தெரியும்........
அவ என்ன பாவம்.. ஆரம்பத்தில் இருந்தே இந்த வீட்டுல அவளும் பாட்டியும் தான் ராஜ்ஜியம் பண்றாங்க... ஷேஷா விருப்பத்தை தான் மதிக்க ஆள் இல்லை...

அவன் விருப்ப பட்டு ஒன்னு கேட்டால் அவன் அம்மாவ தூண்டி விட்டு அழுது நாடகம் போட்டு அவனை தடுத்துடுறாங்க

அவன் ஆசை பட்ட படிப்பை படிக்க விடல
அவன் அப்பா அவனுக்காக உருவாக்குன கம்பெனிய கொடுக்கல .. இவன் அப்பா சொத்தை எடுத்து அவங்க மகளோட பொண்ணுக்கு கொடுக்க பாட்டிக்கு என்ன உரிமை இருக்கு.....

அவன் அப்பா கம்பெனிய தனக்கு வேண்டும் என்று இவ ஏன் கேட்கிறா ... கல்யாணத்துக்கு பிறகு தேவா பட்டது கஷ்டமா தெரியலாம்.. ஆனால் அந்த கல்யாணமே அவளும் பாட்டியும் அவனோட அம்மாவ வச்சு மிரட்டி சாதிச்சது தான் ....

பாட்டியும் பேத்தியும் கலைய முட்டாளாக்கி தாங்கள் விருப்பத்துக்கு ஆடுற பொம்மையா வச்சிருக்காங்க... இவங்களுக்கு காரியம் ஆகனும்னா இந்த பொம்மைக்கு கீ கொடுக்க வேண்டியது

ஷேஷாவோட அம்மா எந்த இடத்தில் ஒரு நல்ல அம்மாவா நடந்து இருக்காங்க

காதல் விஷயத்தில் மட்டும் தான் பாட்டி ஷேஷாவோட விருப்பத்தை எதிர்த்தாங்களா ... அப்படி இருந்தால் பாட்டி பண்றதுல ஏதோ நியாயம் இருக்கு என்று நினைக்கலாம் ஆனால் அவன் படிப்பில் இருந்து எந்த விஷயத்திலும் அவனோட விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்கல

ஷேஷாவோட நல்லதுக்கு என்று சொன்னாலும் இவ்வளவு அடக்குமுறை காட்டுனா தப்பா தான் போவான்..
 

உதயா

Well-Known Member
தேவசேனாக்கு என்ன ஒரு இக்கட்டான சூழ்நிலையை பிரகா அமைச்சுட்டு போயிருகாங்க. பேரன் மேல வெச்ச பாசமா இல்லை அவங்களோட பையனுக்கு அவங்க செய்ய நினைத்த நியாயமா? எதுவா இருந்தாலும் சிக்கினது தேவா.

அமுருதா நிலை ரொம்ப பரிதாபமானது. ஆனால் அவளோட அப்பாவோட சுயரூபம் கொஞ்சம் கூடவா அவளுக்கு தெரியாது. சேஷனோட இவ்வளவு நெருக்கமா பழகிய இவளுக்கு அப்பாவை எதிர்க்க துணிவில்லை. அவளை கல்யாணம் செய்து கொள்ளாமல் இஷ்டத்துக்கு வாழ்ந்த இவனுக்கு உடனடியாக எல்லாத்தையும் விட்டுட்டு போய் அவளுக்காக செயல்பட துப்பில்லை. இதுல அடுத்தவங்களை குறை சொல்ல வந்துட்டான் கையாலாகதவன்.

அமுருதாவின் பிறப்பு ரகசியம் என்ன? அவ இவனுக்கு சொந்தமா இருப்பாளோ?
அப்படி என்ன துப்பில்லாமல் செஞ்சுட்டான். அவன் காதலுக்கு பாட்டி கிட்ட சம்மதம் கேட்டான். அவங்க முடியாது என்று சொன்னாலும் அவங்க சம்மதத்துக்காக போராடுனான் . ஆத்ம நாதன் கிட்டயும் போய் பேசினான். இரண்டு பக்க குடும்பத்தையும் சம்மதிக்க வைக்க முயற்சி செய்தான். பாட்டி அவனோட கனவான அப்பாவோட கம்பெனிய தர மாட்டேன் என்று மிரட்டின போதும் அந்த கம்பெனிய தேவா கிட்ட கொடுத்த போதும் எங்க காதலுக்கு உங்கள் சம்மதம் தான் வேண்டும் என்று நின்னான். ஆனால் இந்த கேப்ல அந்த கேடு கெட்ட நாதன் அந்த பொண்ணை பேசியே கொன்னுட்டான் .

அவன் வெளிநாட்டில் இருக்கும் போதே ஷேஷாவோட அப்பா கம்பெனிய தனக்கு வேண்டும் என்று கேட்டவள் தான். இந்த காதலை வச்சு பாட்டி பேரன் நடுவில் இருந்த பிரச்சினைய பயன் படுத்தி அந்த கம்பெனிய சொந்தம் ஆக்கிகிட்டா ...

பாட்டி நஷ்டத்தில் போற அந்த கம்பெனிய திறமையா எடுத்து நடத்தி ஜெயிச்சு காட்டு என்று ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் ஷேஷாவுக்கு .

காதல் விஷயத்தில் எதிர்க்க எதிர்க்க தான் பிடிவாதம் கூடும். அவனோட காதல் தப்பா இருந்தால் அதை அவனுக்கு சாதகமான வழியிலே போய் சரி செஞ்சு இருக்கலாம்.

கலை இத்தனை வருஷம் தன் மகனுக்காக எதையும் செய்யல இப்போ தான் முதல் முறையா மகனுக்காக தேவா கிட்ட பேசுனாங்க அதையும் தேவா ஒன்னும் இல்லாமல் ஆக்கிட்டா இனி அந்த அம்மா மகனுக்காக ஒரு வார்த்தை பேசாது..

அம்மாவ பத்தி ஷேஷாவுக்கு எதுவும் தெரியாத மாதிரி காட்டுறாங்க.. ஆனால் அந்த அம்மாவுக்கு மகனை பத்தி என்ன தெரியும். சின்ன வயசில் இருந்தே அவனுக்காக என்ன செஞ்சாங்க.. பாட்டி தேவா என்ன சொன்னாலும் கேள்வி கேட்காமல் தலை ஆட்ட சொன்னாங்க.

இனியும் கதை தேவாவுக்கு சாதகமா தான் போகும். தேவாவுக்கு மட்டும் தான் திறமை இருக்க மாதிரி அவளால் மட்டும் தான் இந்த கம்பெனிய தூக்கி நிறுத்த முடியும் என்றும் ஷேஷாவால ஒன்னும் செய்ய முடியாமல் கடைசியா தேவா வந்து காப்பாத்துற மாதிரி போகும்.
 

Arulgeetas

New Member
Patti 3 per kittayume kandippatha irunthanga , sesa Pattiku apparam business eduthu nadatharathukku avanukku tholilkalvi thevai athathan business school serthargal sesa appa irunthirunthal avan vishcom padichu tvchennal Mattum parthiruppan sesa appa slowa Mattha business patthi sollikuduthirupar but situation appadi illa 3m chinna pasanga vayathana manusi veliulagam theriyatha marumagal and peran ,pethi antha amma evvalavu vali vethanaiya marachu thannoda soththu ethiri kaiyil pogakudathunnu padupattirukkum, maththa 2 perukkum Patti kastam purinthamathiri en sesakku puriyala avan Avanapathi Mattum yocikkaran ethey amirtha(athma) illama verayaravathai love pannirunthal Patti kattayam kalyanam pannivachuruppanga . Athmanathan ponna vittu marumagal aga kudathunnu solla ethavathu strong resion kandippa irukkum.
 

Arulgeetas

New Member
Namma asaipadarathu Ellem eppavum nadathute irrukkathu situation thagunthamathiri namma asaigal marum, mudivugal marum en life marum namma athai predict Panna mudiyathu .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top