மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்
அடடா
கௌரிக்கு வந்த கோபத்துக்கு ஜமுனாவை நல்லா வைச்சு செய்வாளோன்னு பார்த்தால் இப்படி புஸ்வாணமா அமுங்கிட்டாளே
இன்னமும் சூர்யாவின் பாத்ரூம் பிரச்சினைக்கு ஒரு முடிவு வரவில்லை
ஜமுனா கத்தி பேசினாலே சூர்யா பயந்துக்கிறாளே
இதை எப்படி கௌரி சரிசெய்யப் போறாள்?
சாவித்திரியம்மா சான்ஸே இல்லை சூப்பரோ சூப்பர்
அருமையான மனுஷி
பேத்தின்னு பிள்ளைகளுக்கு ஒண்ணுமே செய்வதில்லை
ஆனால் ஜமுனாவுக்கு கால் மிதிக்க மட்டும் பிள்ளைகள் வேணுமோ?
மொதோ வெங்கடசாலத்தை வெட்டணும்
எதுக்கெடுத்தாலும் பொண்டாட்டிக்கு பரிஞ்சுக்கிட்டு வந்துடுறான்
அவ்வளவு பரிஞ்சுக்கிட்டு வர்ற பரதேசி கிழட்டு நாயி இதுங்க தின்ன பிளேட் டம்பளர் பாத்திரங்களை சிங்க்கிலாவது போடலாமில்லே
வேலை செய்ய நான் என்ன சாவித்திரியா ன்னு கேட்கும் ஜமுனா என்ன விக்டோரியா மஹாராணியின் பேத்தியோ?
இவ்வளவு நாள்தான் என்னையும் பிள்ளைகளையும்தான் நீ கண்டுக்காமல் இருந்தே
இப்போவாவது எங்கள் மீது நீ கொஞ்சம் பாசமா இரு
பிள்ளைகளுக்காகத்தான் நான் சாவித்திரியம்மாளை வேலைக்கு வைத்திருக்கிறேன்
அவங்களும் உன்னைப் போல வயசானவள்தான்
எனக்கு வேற வேலைக்கு போற பொண்டாட்டி வந்திருக்கிறாள்
அதனால நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணித்தான் ஆகணும்
அட்லீஸ்ட் உன்னுடைய வேலைகளையாவது நீயே செஞ்சுக்கோன்னு ஜமுனாவிடம் சிவசங்கர் கட் and ரைட்டாக தெளிவாக சொல்லலாமே