பொதுவா பார்த்தா நீங்க சொல்றது ரொம்ப சரி தான் குடியினால குடிக்கிறவன் மட்டும் பாதிக்க படமாட்டான் அவனை சுத்தி இருக்கிறவங்களையும் அது பாதிக்கும். தலைவர் கூட ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி இருக்காரே குடியால் ஒருத்தன் இதுவரை செய்யாத தப்பை கூட செய்வான் குடி உண்மையிலேயே ரொம்ப மோசமானது. நான் ஒத்துக்கிறேன்.
ஆனா நான் கதையில் என்ன சொல்றீங்களோ அதுக்கு தான நான் react பண்ண முடியும். அதுனால தான் நான் உதய் திட்டுறது தப்பு சொன்னேன்.
நான் react பண்றதுக்கு காரணம் கூட comment-la mention பண்ணி இருந்தேன். ஹீரோ ஹீரோயின் தவறா நடந்தாவோ அதாவது அறம் மீறி நடந்தாலோ அவர்களால் பிறர் பாதிக்க பட்டாலோ என்னால ஏத்துக்க முடியல அப்படின்னு சொல்லி இருப்பேன். இதுல ஹீரோவான உதய் அவனுடைய சுயநலத்துக்காக ஏற்கனவே கெட்டு குட்டி சுவரான (அதுவும் உங்களுக்கு பிடிக்காத குடி பழக்கம் உடையவர்) ஜெயந்தனை திருந்த விடாம பண்ணிட்டான் அப்படின்னு கேட்கும் போது எனக்கு உதய் மேல கோவம் வருவது இயல்பு தான. அவன் திருந்தினால் நீங்க சொன்ன மாதிரி பல அசம்பாவிதங்கள் அவனாலயாவது நடக்காம தடுக்கலாம் தானே.
ஜெயந்தன் இயங்கவே கஷ்டப்படுகிறான் அதாவது அவனால நார்மலா நடக்க முடியல அப்படி பட்டவன் கிட்ட போய் வேற வழியில்லை உனக்கு உதவி தொலைக்கிரென் அப்படிங்கிற மாதிரி பேசுனது எனக்கு சரியா படல. நமக்கு பிடிக்காத சூழ்நிலை உருவானாலோ நம்மளை பல கஷ்டங்கள் துறத்துனாலும் அதுல இருந்து விடுபட குறைஞ்சது உடல் நலமாவது வேணும் அதாவது normal ஆ நம்மளால இயங்க முடியனும் அப்ப தான் நம்மளால போராட முடியும். இப்ப அவன் physical ah weak அது automatic ah அவன் மன நலத்தையும் மன தைரியத்தையும் குறைக்கும் weak ஆக்கும்.
So அவனுக்கு தேவை எல்லாம் நம்பிக்கையான பேச்சுக்கள், சரியான மருத்துவம், counselling, சரியான வழிகாட்டுதல்(உதய் உருப்படியா என்ன பண்ணலாம்ன்னு அவனை யோசிக்க சொல்லி இருப்பான்) இதெல்லாம் தான்.
"அப்புறம் என்ன செய்ய முடியும் என்னாலன்னு காம்ப்ளக்ஸ் வளர்த்துக்காம உருப்படியா ஏதாவது செய்ய முடியுமான்னு யோசி. உனக்காக இல்லாட்டியும் நான் கட்டி இருக்குற அந்த ராங்கிக்காகவாவது உன்னை இப்படியே விட மாட்டேன். நீ என்ன கோமாலாய இருக்க இன்னும் சுய புத்தி இருக்கு தானே ரெண்டு கண்ணும் பாதிக்க படாம ஒரு கண்ல பார்வை இருக்கு. படுத்து கிடக்கிற நிலைல இல்லாம சிரமப்பட்டாலும் நடக்க முடியுது எல்லாத்துக்கும் மேல நீ என்ன தப்பு பண்ணி தொலைச்சாலும் சகிச்சுக்கிட்டு உன் வாழ்கையை சீர் படுத்த என் பொண்டாட்டி இருக்கா கவுண்ட் த பிலஸ்ஸிங்ஸ் இடியட் புரிஞ்சுதா" இது உதையொட dialogue
இது எப்படி இருக்கு உனக்காக இல்லனாலும் என் மனைவியோட உடன்பிறப்பா போய் தொலஞ்சிட்ட அந்த பாவத்துக்கு உனக்கு உதவி தொலையிரென் அந்த தொனியில் இருக்கு.
இதையே கொஞ்சம் soft ah அனுசரணையுடன் சொன்னா எப்படி இருக்குமோ அதை தான் நான் comment பண்ணி இருந்தேன்.
Ofcourse அவனால தான் தன் பொண்டாட்டி இப்ப சண்ட போட்டு தன் கூட இல்ல அந்த கோவம் இருக்க தான செய்யும் அப்ப அவன் அப்படி தான் பேசுவான் சொன்னீங்கன்னா அது தான் நான் தப்பு சொல்றேன். திருடுனது நால இப்ப எப்படி பிறிஞ்சுட்டோம் பாரு ஆச்சா போச்சா ன்னு கத்தலாம் தப்பு இல்ல அதை விட்டுட்டு ஆறுதல் சொல்றேன்ங்கிற பேர்ல அவனை இன்னும் வேதனை படுத்துறது நியாயம் இல்ல இதுக்கு உன்னால தான் எல்லாம் நீ எல்லாம் எதுக்கு உயிரோட இருக்க அப்படின்னு திட்டிட்டு மட்டும் போய் இருக்கலாம். I hope you understand my view. எப்பா எவ்ளோ type பண்ணிட்டேன். இதுவரை உங்க கதையை வாசிச்சுட்டு comment பண்ணாம போன குத்தத்துக்காகவா என்னய இந்த கதைக்கு இவளோ comment பண்ண வைக்கிரீங்க
பூவை தான் முதல்லே சொன்னாள்ல வீட்டுக்கு கூட்டிட்டு வரல ஹோட்டல்ல தங்க வசுக்கிறேன்னு இவனா தான volunteer ah போய் மாட்டிகிட்டான். அப்ப அனுபவி ராசா