“கண்கள்
கூசிட
காலைகதிரவனின்
கதிர்கள்
சாளரத்தின்
வழியே
சன்னமாய்
என்னை தாக்க
சட்டென்று விழித்தேன்
சயனத்தில்
கண்ட அவள்
முகம்
சடுதியில் மறைய
இதயத்தின்
நுழைவு வாயிலில்
என் இனியவள்
நுழைந்திருந்தாள்
கனவில் கண்டவளை
இன்றைய தினம் கண்டு
காதலைச்சொல்லி
கரம்பிடிக்கும்
நாள் குறித்து
இன்பம் கொள்வேனோ
நான்?