“காயம் பட்ட
நெஞ்சில்
களிம்பு
பூசிட வந்த
காதல்
கத்தியால்
கீறிவிட்டு சென்றது
என் இதயத்தை”
“என் வாய்வழி
உரைக்காத
காதல்
என் கவிவழி
உணர்ந்திருப்பாய் என
நான் கனவு காண
நீயோ
கைவிட்டு சென்றாய்
என்னை
காட்டாற்று வெள்ளத்தில்”
“சொல்லாத
என் காதல்
சோகம் தந்ததோ
எனக்கு”
“என்
முதல் காதல்
முற்றுபெற்றது
முகவுரைக்கு
முன்னே”
“கண்களில்
வழியும்
கண்ணீரை மறைக்கும்
வழி அறிந்த நான்
உன் நினைவை
என் நெஞ்சம் மறக்கும்
வழி அறியவில்லையே?”
“ஆயிரம்
இழப்புகள்
கண்டேன்
அசையாமல் நின்றேன்
ஆணிவேராய்
அன்பே
நீ விட்டுச்சென்ற
ஓர் நொடி
வேரற்ற மரமாய்
ஆட்டம் கண்டேனே
ஏனோ?”
“என் காதல்
யாருக்கும்
சொல்லாமல் என்
இதயத்தில்
நான் வளர்த்த காதல்
உன்னிடம்
நான்
மறைத்த காதல்
என்
மரணத்திற்கும்
வழிவகுக்கிறது இந்த
காதல்”
“கரம்கோர்க்க
வேண்டிய காதல்
கண்ணீர் அஞ்சலியோடு
காதல் தோல்வியாய்
ஆசைகளை
அடைக்கிடும்
என் அகத்துள்ளே”
“நீ
பேசாமல்
இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு
நிமிடங்களாய் குறைக்கிறது
என் நெஞ்சத்துடிப்புகள்
அதன்
துடிப்பினை நிறுத்திட”
“என்
தூய்மைக்காதல்
என்னை
துயரத்தில்
ஆழ்த்தியது
என் காதல்
தோல்வியுற்றது
என்பதை
காயம் பட்ட
நெஞ்சம் ஏற்க
மறுக்கிறது
என் மரணம் தான்
அதற்கு
மருந்து எனில்
அதை மனமுவந்து
வரவேற்கிறேன்
வந்துவிடு மரணமே
என் காதல்
தோல்வியின்
வேதனை தீர்க்க
என்னை தீர்த்துவிடு”