எனக்கு பொதுவாக தினமும் ஒருமுறையேனும் செய்தித்தாள்களை புரட்டிப்பார்க்கும் பழக்கம்...
அதில் சமீபத்தில் பாதித்த செய்து இது...
வேளச்சேரி ஏரிக்கரையில் ஒரு தாய் தனது குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுது வலி ஏற்படுகிறது என்கிற காரணத்தால் குழந்தையை ஏரியில் வீசி கொன்றிருக்கிறது. கேட்டபொழுதே ரத்தம் கொதித்தது.
( இன்னும் ஒரு சம்பவமும் கூட இப்பொழுது நினைவிற்கு வருகிறது. காதலன் தனது குழந்தையையே ஏற்று கொள்ள மறுக்க, குழந்தை கலைக்கும் நிலையை தாண்டியதால் அதை பெற்று தன் தாயாரின் உதவியுடன் கொன்று குப்பைத் தொட்டியில் அந்த பெண் வீசி சென்றாளாம். இதுவும் சமீபத்திய செய்தி தான் )
அந்த கருவை வைத்து வடிவமைக்கப்பட்ட கதை. மிக அழகாக நேர்த்தியாக வந்திருக்கிறது. மீதி கதையையும் படித்து விட்டு முழு விமர்சனம் தருகிறேன்.
வாழ்த்துக்கள் தோஷி...