Vani Ramchander
Well-Known Member
Friends nna ippadi irukka venum. Nalla timely song.
கல்யாணம் ஆகி இரண்டு வாரம் தான் மா ஆகுது.... தீடிரென நடந்த கல்யாண அதிர்ச்சில இருந்து வெளிய கூட வரலை .....இதுல என்னோரமும் திட்டிற மாமியார் ....அவ என்ன புத்தரா????ஆயிரம்தான் சொல்லுங்க ; சேரனுக்கு இருக்கும் நேசம், காதல் மதுராவுக்கு இல்லை. சுத்த வேஸ்ட் . அவளுக்காக சேரன் எவ்வளவு மெனக்கெட்டாலும் அதை உணரவில்லை. பாராட்டவில்லை. திருட்டு கல்யாணம் செய்து அழைத்து வந்தான் என்பதற்காக அவன் இதையெல்லாம் செய்ய வேண்டும். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று அலட்சிய படுத்துகிறாள். குடும்ப ஒற்றுமைக்காகவோ. அவன் முன்னேற்றத்திற்கோ ஒரு துரும்பை கூட எடுத்து போடவில்லை. மாமியார் கிட்ட சண்டை ; எடுத்தெரிஞ்ச பேச்சு; இல்ல அழுகை ; அமுக்குணி. மொத்தத்தில் ஹீரோக்கு ஏத்த ஹீரோயின் இல்லை.சண்டை போட்டாலும் பிறந்த வீட்டு பாசம் மட்டும் விடவில்லை. மொத்தத்தில் ஹீரோக்கு ஏத்த ஹீரோயின் இல்லை.
தோப்பு குத்தகைக்கு எடுக்க முடிவு பண்ணினவனுக்கு அவன் பிரெண்ட்ஸ் பணம் தர்றேன்னு சொல்ற எபி படிங்க சிஸ், அதுல சொல்லியிருக்கேன்இந்த கார் வாங்குற முடிவு எப்போ வந்துச்சு....
அதே பதினைந்து நாட்கள்தான் சேரனுக்கும் ஆகிறது. சேரன் எப்படி நாலையும் யோசித்து நடக்கிறான். பெத்தவங்களின் செய்கைகளை நாசூக்கா கண்டித்து, மனைவியை விட்டு கொடுக்காம அவளுக்கு வேண்டிய வசதியை செய்து கொடுத்து, தன் முன்னேற்றத்திற்கும் குத்தகை, பிசினஸ் என்று பார்த்து எவ்வளவு செய்கிறான். அதையெல்லாம் மதுரா கண்டுக்கவே இல்லையே. அவனுக்கு சப்போர்ட்டா, ஆக்க பூர்வமா இவள் என்ன செய்தாள். . பிறந்த வீடு பாசம் பற்றி தப்பு சொல்லவில்லை. புருஷன் மான, அவமானம் பற்றியும் கொஞ்சம் அக்கறை இருக்க வேண்டும். இவளே, அவசர கல்யாணம், திருட்டு கல்யாணம் என்று சொல்லலாமாகல்யாணம் ஆகி இரண்டு வாரம் தான் மா ஆகுது.... தீடிரென நடந்த கல்யாண அதிர்ச்சில இருந்து வெளிய கூட வரலை .....இதுல என்னோரமும் திட்டிற மாமியார் ....அவ என்ன புத்தரா????
அவ மன வருத்தத்தை புருஷன்ட சொன்னா அது எடுத்தெரிஞ்ச பேச்சா....
எந்த பொண்ணுக்கும் பிறந்த வீட்டு பாசம் இருக்கத்தானே செய்யும் அதில் என்ன தவறு...
சத்தியமா மதுராக்கு இப்படி ஒரு comment expect பண்ணலை...