Sathya Velusamy
Well-Known Member
அவனுக்கும் 15 நாள் தான் ஆனா அவன் ஒன்னும் அவன் குடும்பத்தை விட்டு வரலையே....அவன் வீட்டுல சொல்லாம கல்யாணம் பண்ணினாலும் வீட்டுல ஏத்துகிட்டாங்க.....ஆனா அவங்க அம்மா பேச்சு மதுராவை மட்டுந்தான் குறை சொல்லும்....அதே பதினைந்து நாட்கள்தான் சேரனுக்கும் ஆகிறது. சேரன் எப்படி நாலையும் யோசித்து நடக்கிறான். பெத்தவங்களின் செய்கைகளை நாசூக்கா கண்டித்து, மனைவியை விட்டு கொடுக்காம அவளுக்கு வேண்டிய வசதியை செய்து கொடுத்து, தன் முன்னேற்றத்திற்கும் குத்தகை, பிசினஸ் என்று பார்த்து எவ்வளவு செய்கிறான். அதையெல்லாம் மதுரா கண்டுக்கவே இல்லையே. அவனுக்கு சப்போர்ட்டா, ஆக்க பூர்வமா இவள் என்ன செய்தாள். . பிறந்த வீடு பாசம் பற்றி தப்பு சொல்லவில்லை. புருஷன் மான, அவமானம் பற்றியும் கொஞ்சம் அக்கறை இருக்க வேண்டும். இவளே, அவசர கல்யாணம், திருட்டு கல்யாணம் என்று சொல்லலாமா
அதுவும் அவ மாமியார் கூட சண்டை போடல .....புருஷன் கிட்ட room la சண்டை போட்டா.....
ஒருத்தங்களை விரும்புனா ஓடிப்போய் தான் கல்யாணம் பண்ணும்னு இல்லை....எல்லார் ஆசியோடு கல்யாணம் நடக்கனும்னு தான் எல்லா பொண்ணுங்களும் நினைப்பாங்க....இவன் அவ சம்மதம் கூட கேட்காம கல்யாணம் பண்ணினான்....அதை அவங்களுக்கான தனியான நேரத்தில் சொல்ல கூட அவளுக்கு உரிமை இல்லையா....அதுல அவனோட மானம் அவமானம் என்ன ஆச்சு....
சேரன் இவ்வளவு செய்யறான் அப்படினா அது அவனோட கடமை...யார நம்பியும் அவ வரலை....இவனை மட்டும் தான் நம்பி வந்துருக்கா....அவ என்ன கண்டுக்கலைனு புரியலை எனக்கு....
அவனுக்காக தானே அவளும் எல்லாம் செஞ்சா....