அரளிப்பூ ஆராதனை...
கோமதி அருண்
காதலை அள்ளி தரும் விகிர்தன்
காதலை ஏற்க பயப்படும் ஆரவி...
காதல் கல்யாணத்தில் முடிந்ததா????
கல்யாணத்திற்கு பிறகு
காதல் வளர்ந்ததா????
காதலோடு கதைக்குள்
கலந்து விடும் காதல் கதை...
காதலில் நம்பிக்கையும் பாதுகாப்பும் புரிதலும் இருந்தால்
பயமின்றி தைரியமாக காதல் கொள்ளலாம்.....
கல்லூரி வாத்தி
காதல் பாடம்
அருமையாக சொல்லித் தந்தார்....
" நீ கட்டும் சேலை மடிப்பில
கசங்கி போனேனே....
பாடலில் துள்ளளான அதிரடியான
ஹீரோ ஹீரோயின் சந்திப்பு அருமை.....
கண்ணகி.....
காந்த கண்ணழகி யாக மாறும் தருணம்......
கண்ணு ரெண்டும்
ரங்க ராட்டினம் என்ற துள்ளலுடன் கல்யாணத்திற்கு பிறகும் பாடலில் அசத்தும் காதலன்....கணவன் விகி....
ரஞ்சனி அமர் விஷ்ணு
காலேஜ் கலாட்டா... காமெடி சூப்பர் சூப்பர்.....
விகிர்தன் ஶ்ரீனிவாஸ்
நட்பு அபாரம்.....
சீனி வரும் இடம் எல்லாம்
சிரிப்பு மழை தான்...
சக்கரை.... சக்கரை பொங்கல்
வண்டு முருகன்
புஷ்பா புருஷன்
என்று பல பெயர்களில் ஓட்டுவது சிரிப்பின் உச்சம்....
விகியின் அப்பா
கமலக்கண்ணன்....
Lotus ... கமலா.... ஸ்கூல் headmaster ஒழுக்கமும் நேர்மையும் கண்டிப்பும் கொண்டவர்....
மகனின் மனதை புரிந்த
தோழனாக அப்பா...
தண்டனை கொடுப்பதும்
தட்டிக் கொடுப்பதும்
தந்தை சூப்பர்......
காதலினால் தவறிய வாழ்க்கை
காதலே திருப்பி தரும்
காதலுடன் ஒரு வாழ்க்கை....
அவளின் காதலால் சாபம் பெற்றவள்
அவனின் காதலை வரமாக பெற்றால்.....
கடந்த கால வாழ்க்கையின் வலியில்
கண்ணீரில் கரையும் மீனே
கரைந்தது போதும்
காதலுடன் வா
கைப்பிடித்து அழைத்து செல்ல
கரையில் காத்திருக்கேன்
இறந்த காலத்தில் இருந்தவள்
இறந்துவிட்டாள் ....
இனி உனக்கு எதிர்காலம் மட்டுமே
நிஜமடி பெண்ணே....
நிகழ் காலத்துக்கு வந்திவிடு...
இந்த விகியுடன் கண்ணே....
காதலை உணர்ந்த நொடி ஆரவி
காத்திராமல் சொல்லிவிட
காதலை பெற்றவனோ
கண்ணழகியை காக்க
வைத்தான் விகி......
காதலின் அவஸ்தை
அவளும் அனுபவிக்கட்டுமே.....
இசைக் காதலனே....
இசை பித்தனே....
இன்னிசையில் காதலை சொல்லி
இவளின் இதயத்தை அசைத்து
இவனின் பாட்டின் மூலம்
இம்சை தரும் ஒவ்வொறு
இடமும் அப்பப்பா.....
ஏழிசையில் உன் காதலை சொல்லிட
இவள் இசைவில் உயிர் பெற்றதடா உன் காதல்....
கண்ணில் காதல் காணும் வரை காதலியாக தெரிந்த நீ_ உன்
கண்ணில் கண்ட காதலுக்கு பின்
கண்ணே_ நீ என் மனைவி ஆகிவிட்டாய்.....
தவறு செய்யாத மனிதன் இல்லை
தவறை திருத்திக் கொள்ளதவன் மனிதனே இல்லை
தவறு செய்து விட்டு
திருந்தி தன்னையே
தன் அடையாளத்தை மாற்றி
திருத்தி அமைத்து கொண்டு
தனக்குத் தானே கோவம் என்னும்
தனிமை சிறையில்
தனித்து இருக்க....
தடையை தாண்டி
தாக்கத்தை ஏற்படுத்தி
சிறையை உடைத்து
சிறகடித்து பறக்க செய்யும்
சுயநலமற்ற விகி காதலில்
சிக்கித்தான் போகுது ஆரவி மனசு.....
காதலின் சங்கீதமாய்
இசையின் சங்கமமாக
த்வனி _ செல்ல மகள்...
தந்தையின் தாலாட்டில்
தவழும் செல்ல குழந்தை....
கதை முழுவதும் விகி மட்டுமே
விகியின் காதல் மட்டுமே....
ப்பா...
என்னா ஒரு காதல்
என்ன ஒரு புரிதல்....
என்ன ஒரு ஆறுதல் அரவணைப்பு...
அழகோ அழகு...
காதலை( கதை)
ரசிச்சு ரசிச்சு
சிரிச்சு சிரிச்சு...
படித்தேன்....
மொத்தத்தில் valentine's day special love story....
வாழ்த்துக்கள் சகி