This week....working load adhigampa adhan ennala perusal.... Pods mudiyala...next epi kandipa perusa podaren...kk... Tqqq...sisSis super konjam perusa ud thanga
This week....working load adhigampa adhan ennala perusal.... Pods mudiyala...next epi kandipa perusa podaren...kk... Tqqq...sisSis super konjam perusa ud thanga
Nice update mam[/QUOTE
Tqqq....sis ...keep supporting me..
Tqq...sis..Very nice
Tqqq....sisNice update
Tqq....dr...Dear mam..... Nice ud...
Nice episode.Read panna start pannatha epi mudinja Mari oru feel sisHii..frds....anp-6 pottachu...spelling mistakes irundhal mannikavum....happy reading
(* _*)...smile... Smilies enaku varala..so...
அத்தியாயம் – 6
எந்நேரமும் உன் பார்வைக்கு......
காரணம் தேடுகிறேன் நான்......
இந்நோய்க்கு மருந்து தான் என்ன.....
இதற்கான பதில் உன்னிடம்.....
இருக்கிறது.....
எப்போது அதை சொல்வாய்.....
என்னிடம்.....
“ம்ம்ம்..... குட்..... வினிஷாக்கு எதாவது ப்ராப்ளம்.... இருந்த மாதிரி உங்களுக்கு சந்தேகம் தோன்றியிருக்கா.... இல்ல... உங்ககிட்ட சொல்லிருக்காங்களாம்மா....” என்று ஆதி கேட்க....
“அப்படி எல்லாம்.... எதுவும் இல்லத் தம்பி.... ரொம்ப சந்தோஷமா தான் இருந்தா..... டாக்டர் ஆகணும்ங்கிறது தான் அவளோட ஆசை.... 12 th எக்ஸாம் முடிச்சிட்டு..... என்ட்ரன்ஸ் எக்ஸாம்க்காக கிளாஸ் போயிட்டுருந்தா..... அவ சாகறதுக்கு முன்னாடி நாள் தான்.... எங்களுக்கு அந்த அதிர்ச்சியான.... விஷயம் தெரிஞ்சது.... அன்னைக்கு கிளாஸ் முடிச்சிட்டு வந்த உடனே....”
“பாட்டி..... என்னனேத் தெரியலப் பாட்டி..... ஒரே சோர்வா இருக்குது..... உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குதுப் பாட்டி.....” என்று வினிஷா செல்லம் கொஞ்சிக் கொண்டே அவரிடம் சொல்ல.....
“சரிம்மா..... வினிக்குட்டி..... இப்போ லன்ச் முடிச்சிட்டு..... ரெஸ்ட் எடு..... ஈவ்னிங் ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணிட்டு வரலாம்....” என்ன.....
“ஒகே பாட்டி.....” என்று சாப்பிட்டவள்..... தன் அறைக்கு சென்று தூங்கிப்போனாள்.....
மாலையனதும்.... இருவரும் கிளம்பி ஹாஸ்பிட்டல் சென்றனர்......
அவளை செக் பண்ண டாக்டர்..... அதிர்ந்தார்..... வின்ஷாவிடம் “நீ போய் வெளியே வெயிட் பண்ணுமா......” என்று சொல்ல..... அவளும் சென்று அமர்ந்தாள்.....
“மேடம்..... நான் சொல்லப்போற விஷயம்..... உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம்....” என்று டாக்டர் சொன்னவுடன்..... பதற்றமானார் பாட்டி.....
“என்ன சொல்றீங்க டாக்டர்..... என் பேத்திக்கு எதாவது பிரச்சனையா....” என்று அவர் கேட்க....
“இல்ல மேடம்.... இது அந்த மாதிரி ப்ராப்ளம் இல்ல..... உங்க பேத்தி கர்ப்பமாக இருக்கிறாள்.....” என்று சொல்ல.... அதிர்ச்சியானவர்..... பின் “இல்ல டாக்டர்..... அப்..... அப்படியெல்லாம் இருக்காது டாக்டர்..... எதுக்கும் இன்னொரு முறை செக் பண்ணுங்க..... டாக்டர்.....” அவர் சொல்ல.....
“இங்க பாருங்க மேடம்.... நீங்க எங்க போய் செக் பண்ணாலும்..... இத தான் சொல்லுவாங்க.... இந்த வயசுல இந்த மாதிரி.... நடக்குறது எல்லாம் சகஜமாகி வருகிறது..... சோ..... நீங்க இப்போப் பார்க்க வேண்டியது..... வினிஷாவோட ப்யூச்சர் பற்றி தான்.... நாளைக்கு அவள இங்க கூட்டிட்டு வாங்க.... அபாஷன் பண்ணிடலாம்.....”
டாக்டர் சொல்வதையெல்லாம் கேட்டு..... பிரம்மைப் பிடித்ததுப் போல் இருக்க..... எழுந்து வெளியே செல்லப் போனவர்..... அங்கே வினிஷாவைக் கண்டு..... மீண்டும் அதிர்ந்தார்.....
தன் மொபைலைப் பாட்டியிடம் இருந்து வாங்குவதற்காக வந்தவள்.... இவர்களின் உரையாடளைக் கேட்டு..... பிரம்மைப் பிடித்ததுப் போல் நின்றுவிட்டாள்.....
அதன் பிறகு.... இருவரும் எப்படி வீட்டிற்கு வந்தார்கள்.... என்றே தெரியவில்லை..... ஆளுக்கொரு மூளையில் அமர்ந்திருந்தனர்.....
இளா எழுந்துப் பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு “பாட்டி..... நா...நான் எந்த தப்பும் பண்ணலப் பாட்டி..... என்ன நம்புஙகப் பாட்டி..... எப்படி இது.... நட...நடந்துச்சின்னேத் தெரியலப் பாட்டி......” என்று அழுதுக் கொண்டே சொல்ல.... அவர் எதுவுமே சொல்லாமல் இருக்கவே..... தன்னைப் பாட்டி நம்பவில்லையோ..... என்று அவளுக்கு தோன்ற.... எழுந்து தன் அறைக்கு சென்றாள்.....
வெகு நேரம் கழத்து சுயநினைவுக்கு வந்தவர்...... “வினிஷா” என்று கூப்பிட..... அவள் வரவில்லை என்றதும்..... அறையில் சென்று பார்க்க..... உறங்கிக்கொண்டிருந்தாள்.... அவள் தலையை வருடிக்கொண்டே..... “எனக்கு உன் மேல முழு நம்பிக்கை இருக்குடா..... ஆனா இது எப்படி நடந்துச்சின்னே தெரியலையே.....” என்று கண்ணீர் விட்டு அழுதார்.....
அவருக்கு தலை சுற்றுவதுப் போல் இருக்க..... மாத்திரைப் போடுவதற்கு தன் அறைக்கு சென்றவர்..... மாத்திரைப் போட்டுக் கொண்டு அங்கேயேப் படுத்துக் கொண்டார்......
ஆனால்.... பாட்டி சென்னதெல்லாம் அவள் காதில் விழுந்தாலும் எழுந்திரிக்கவில்லை..... அவர் சென்றதும்..... எழுந்து அமர்ந்தவள்..... சற்றும் யோசிக்காமல் தன் அம்மாவின் நினைவாக வைத்திருக்கும் புடவையை எடுத்து..... “நானும் உங்கக் கூடவே வந்திடறேன்..... அம்மா, அப்பா.....” என்று சொல்லி தூக்கில் தொங்கிவிட்டாள்.....
பாட்டி எல்லாவற்றையும் சொல்லி முடித்தவர்..... அழ ஆரம்பித்துவிட்டார்......
இதை கேட்ட ஆதி..... குழப்பநிலைக்கு சென்றவன்..... பின் தெளிவோடு..... “வினிஷா உங்கக்கிட்ட யாராவது ஃபாலோப் பண்றாங்கண்ணு சொல்லிருக்காங்களா......” என்று கேட்க......
“இல்லத் தம்பி..... ஆனா பலமுறை என் ரூமில் வேற யாரோ இருக்குறமாதிரி இருக்குப் பாட்டின்னு..... என்கூட வந்துப் படுத்துப்பா.....”
“ஒகேம்மா..... உங்கப் பேத்தி சாவுக்குக் காரணமானவன..... நாங்க நிச்சயம் கண்டுபிடிப்போம்...... என்ன நம்புங்க......” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்......
அறையை விட்டு வெளியே வந்தவனின் கண்கள்..... இளாவைத் தேடியது..... அவள் கண்ணில் படவில்லை என்றதும்.... “ச்ச்ச..... எங்கப் போய் தொலஞ்சா..... மத்த நேரம் எல்லாம் வெளியே சிரிச்சிப் பேசிட்டிருப்பா...... லாலீபாப்.....” என்று அவளைக் கடிந்து கொண்டே வெளியே சென்றான்....
அவன் வெளியே செல்லும் வரை ஒளிந்திருந்த இளா.... “அப்பாடி அவன் போயிட்டான்......” என்று நெஞ்சில் கை வைத்து சொல்ல....
“யாருடிப் போயிட்டா....” என்று அவளின் தோளைத் தொட்டாள் ரேஷ்மி....
“அவன் தாண்டி அன்னிக்கு என்ன அடிச்சானே.....”
“ஓ..... அந்த சிடுமூஞ்சியா.... அவன் இங்க என்னடிப் பண்றான்.....”
“ஏய்.... அவன சிடுமூஞ்சின்னு சொல்லாதடி..... செம ஹண்ட்சம்மா தாணடி இருக்கான்.... அதுவும் அவனோடக் கண்ணு இருக்கே..... அப்பா சான்சே இல்லடி.....” என்று சொல்லிக் கொண்டே ரேஷ்மியைப் பார்க்க.... அவளோ இவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்....
“சரிடி..... நான் எதுவும் கமண்ட்ப் பண்ணலப் போதுமா.... வா பேபீஸ் எல்லாம் நமக்காக வெயிட்ப் பண்ணிட்டு இருப்பாங்க.....” என்று சொல்லிவிட்டு அவள்பாட்டிற்கு நடக்க..... ரேஷ்மி “இவளுக்கு என்னமோ ஆயிடுச்சி.....” என்று நினைத்துக் கொண்டே சொன்றாள்.....
விஷ்வா ஹெட் ஆபீஸின் வாயிலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல எத்தனிக்க.... அவனின் முன்பு “ஹாய்.....” என்று வந்து நின்றாள் வைஷாலி.....
அவளை இங்கேக் கண்டு அதிர்ந்தவன்..... “ஏய்.... இங்க என்னப் பண்ற....” அடிக்குரலில் அவன் கேட்க.... “உங்களப் பார்க்கத்தான்....” என்று அவள் சொல்ல.....
“என்னப் பார்க்கவா.... நான் தான் அன்னிக்கே உன்ன என் பின்னாடி சுத்தவேணான்னு வான் பண்ணேன் இல்ல.....” என்று கோவமாக அவன் சொன்னவுடன்....
“சுத்த வேணான்னு தான சொன்னீங்க..... பேச வேணான்னு சொல்லலையே.....” அவன் ஏதோ சொல்ல வர..... அவனின் முன் கை நீட்டி “இருங்க.... நான் செல்லி முடிச்சறேன்.... ஹம்... நான் உங்கப் பின்னாடி சுத்தனதுக்கு நீங்க ரீசன் கேட்கவே இல்லையே...... அததான் சொல்ல வந்தேன்.... நா... நான் உங்கள.... லவ் பண்றேன்.....” என்று அவள் சொல்லி முடிக்கவும்..... ஆதி விஷ்வாவின் தோளைத் தொட்டு “யாருடா இது....” என்று கேட்கவும் சரியாக இருந்தது.... அவனோ பதில் சொல்லாமல்..... சிலையாக நிற்க..... “என்னாச்சு இவனுக்கு....” ஆதி அவனை தட்ட....
வைஷாலி அதற்குள்..... “அண்ணா..... அவர் கொஞ்ச நேரத்துக்கு இப்படி தான் இருப்பார்.... தென்.... நான் வைஷாலி.... இவரோட..... லவ்வர்.....” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.....
“என்ன.... லவ்வரா..... எனக்குத் தெரியாமா இது எப்போ நடந்துச்சு....” என்று அவனின் முதுகில் ஒரு அடி வைத்தான்.... அதில் சுய நினைவுப் பெற்றவன்..... சுற்றி முற்றிப் பார்த்தவன்.... “அதுகுள்ள ஒடிட்டாளா....” என்று மறுபடியும் சுய அலசலில் ஈடுப்பட்டுருந்தவனைக் கண்டு..... ஆதி சிரித்துக் கொண்டான்.... எதுவும் காட்டிக் கொள்ளாமல்..... “டேய்.... மச்சான் உள்ள போகாம..... இங்க என்னடாப் பண்ற.....” என்று சாதரணமாக கேட்டான்.....
“ஹான்.... இல்ல மச்சான்.... உனக்காகத் தான் வெயிட் பண்றேன்.....” என்று சொல்ல.....
“ம்ம்ம்..... நம்பிட்டேன்....” என்று அவனை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு சென்றான்.....
“ச்ச்ச..... எல்லாம் அவளாள தான்....” என்று தன் ஒரு கையில் வைத்திருந்த பைலாலேயே தலையில் தட்டிக்கொண்டு உள்ளே சென்றான்......
உள்ளே சென்ற இருவரும்.... ராஜனுக்கு ஒரு சல்யூட் வைத்தவர்கள்..... அமர.... “சொல்லுங்க ஆதி அண்ட் விஷ்வா..... ரிப்போர்ட் டீடெய்ல்ஸ் என்ன சொல்லுது....” என்று அவர் கேட்க.....
“எல்லாம்.... நாம நினைச்ச மாதிரி தான் சார் வந்துருக்கு..... இன்னொரு சூசைட் நடக்கறதுக்குள்ள..... இமிடியட்டா இந்த ஆப்ரேஷன ஸ்டார்ட் பண்ணியாகணும்.....” என்று ஆதி கண்டிப்பாக சொல்லி முடித்தான்.....
“ஒகே.... ஆதி.... நம்ம முன்னாடிப் ப்ளான் பண்ண மாதிரி.....பண்ணிடுங்க..... இன்னைக்கே இந்த ஆப்ரேஷன் ஸ்டார்ட் பண்ண.... பர்மிஷன் கிராண்டட்..... ஒகே.... நாளைக்கு பர்மிஷன் லெட்டர் உங்க கைக்கு கிடச்சிடும்.... தென் இந்த கேஸுக்கான உங்களோட ப்ஸ்ட் ஸ்டெப் என்ன.....” என்று அவர் கேட்டார்.....
“எங்களோட முதல் ஸ்டெப்..... வினிஷா வீட்டிற்கு அப்போசிட்ல டூ ஃளாட்ஸ் காலியா இருக்கறதா.... இன்வெஸ்டிகேஷன் அப்போ சொன்னாங்க.... சோ.... நாங்க ரெண்டு பேரும் வினிஷா வீட்டுக்கு எதிர்ல உள்ள வீட்டுக்கு குடிப் போகப் போறோம்.....” என்று அவன் சொன்னதும் “அய்யோ..... அந்த ஷாலி அங்க தான இருக்கா.....” என்று நினைத்தவன்.... “நான் எப்போ அவளுக்கு செல்ல பேர் வைச்சேன்..... சரி இத பத்தி நாம நைட் திங் பண்ணுவோம்...” என்று அமைதியாகிவிட்டான்..... “விஷ்வா” என்று யாரோ சத்தமாக கூப்பிடுவதுப் போல் இருக்க..... ஆதி தான் என்றதும்.....
“டேய்..... ஏண்டா இப்படி கத்துற பக்கத்துல தான இருக்கேன்.....” என்று சொன்னவனை இருவரும் ஒன்றாய் சேர்ந்து..... முறைத்தனர்.....
இங்கே தன் கேபினில் அமர்ந்து இருந்த இளா..... “அவன் வெளியேப் போகும்போது யாரையோ தேடுனானே..... ஒரு வேல நம்மளத்தான் தேடுனானோ....” தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவளின்...... மொபைல் ஒலிக்க எடுத்து காதில் வைத்தாள்....
அவள் அம்மா போனில் சொன்ன விஷயம்..... அவளைத் தானாக ஆதியை நினைக்க செய்தது......
-தொடரும்
Mm...tqq...sis....Nice episode.Read panna start pannatha epi mudinja Mari oru feel sis
"அனல் மேல் பனித்துளி"-ங்கிறWelcome .....and tqqq..BJ sis..