அடப்பாவி
இந்தம்மா எவ்ளோ கூலா சொல்லுது வெளியே போகமாட்டான்.... உன்னை தொந்தரவுபண்ணமாட்டான்..... பெருசு பண்ணாத...... தானே சரியாகிப்பான்......
இதெல்லாம் பொண்ணு கிட்ட பையனை பற்றி சொல்லி கல்யாணம் பண்ணிவச்சிருந்தா ஓகே......
இவங்க இப்போ பண்ணுறது ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிக்கிற வேலையில்லையா....... துரோகமில்லையா???
அவ எதுக்கு இவங்க பையனுக்காக அவளோட வாழ்க்கையை அழிச்சுக்கணும்???
நான் பார்த்தவரை கணவன் மனைவி பிரச்சனை ஓடிக்கிட்டே இருந்தாலும் இந்த மாமியார்கள் பையனுக்கு கொடுக்கும் முட்டே மொத்தமா பிரிச்சி விட்டுடும்.....
வசந்த் மாதிரி கல்யாணம் பண்ணிவச்ச வீடுகள் இருக்கு...... எங்க ஊரில் 2 பொண்ணுங்களுக்கு இப்படித்தான்....... ஒரு பெண் ஒரே வாரத்தில்..... இன்னொரு பெண் சில மாதங்களில்...... ஒரு பையன் எங்க ஊரு தான்....... இது நடந்ததும் ஊரை விட்டே போய்ட்டாங்க...... இன்னொரு பையனோட அம்மா தான் எங்க ஊர்......
ரெண்டு பொண்ணுகளுக்கும் வேற கல்யாணம் பண்ணிட்டாங்க...... ரெண்டு பேருக்கும் குழந்தையும் இருக்கு இப்போ.......
எங்க ஊரிலே ஒருத்தங்க wife இறந்துட்டாங்க...... 5, 3 வயசில 2 குழந்தைங்க...... அடுத்த கல்யாணம் பண்ணுறப்போ குழந்தை பொறக்காத மாதிரி பொண்ணு வேணும்னு தேடி கண்டு பிடிச்சி யூட்ரஸ் பிரச்சனை இருக்கிற பொண்ணை கட்டிவச்சாங்க பையனோட அம்மா......
எப்படியெல்லாம் சுயநலமா இருக்காங்க பாருங்க பொம்பளைங்க.......
என்ன அந்த பொண்ணுக்கும் ஒரு வாழ்க்கை கிடைச்சுதேன்னு சந்தோசப்பட்டுக்கலாம்.......