உறவும் பிரிவும் உன்னாலே 8

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :p
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

அடிப்பாவி கௌசல்யா
அவ்வளவு தூரம் நான் சொல்லியும் சக்திவேல்கிட்டே இப்பிடி கவுந்துட்டியே
அம்மாக்கிட்டே நக்கலு வேற
ம்ம்ம்ம்.........நடத்து கௌஷி நீ நடத்து

ஓவியா பின்னாடி போன அவன் பூளவாக்கம் தெரியும் பொழுதுதான் உனக்கு இருக்கு
உனக்கு மேலே உங்கம்மா
இத்தனை நாள் என்னன்னு கூட கேட்காத மாப்பிள்ளை மாவாலே செய்த பிள்ளைக்கு கறியும் மீனுமா விருந்து சோறு போட்டு அமர்க்களப்படுத்துறாளே

கௌசல்யாவைக் கணக்கு பண்ணப் பார்த்த கணக்காளருக்கும் மற்ற ஆண்களுக்கும் செருப்படி கிடைத்ததா?
சிவம் நன்றி மறவாத ஒரு நல்ல ஊழியர்

கிரிஜாவுக்கு எவ்வளவு சுயநலம்?
கௌஷி கூட சக்தியும் வீட்டுக்கு வருவதால் இவளுக்கு இன்னிக்கே ஓசி சவாரி இல்லையா?
ரொம்ப நல்லது
ஹா ஹா ஹா
அடுத்தவன் வீட்டு பிள்ளையா இருந்தா இந்த கவனிப்பெல்லாம் இருக்குமோ? சொந்தக்காரனா வேற போய்ட்டான். தன் கண்முன்னால் வளர்ந்த பிள்ளை வேற, அதான் இம்புட்டு கவனிப்பு.
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.புது மேனேஜர் ஷக்தின்னு, கௌசிக்கு தெரியாதா:sneaky::sneaky::sneaky:.
அடப்பாவி...கௌசல்யா வந்ததும் புது மேனேஜரை மடக்கிட்டான்னு பால முருகன் எல்லார் கிட்டயும் கதை கட்டிட்டானே:sick::sick::sick:.

கௌசல்யா,சிவம் குழந்தைக்கு பணவுதவி செய்ததை மறக்காத சிவம்,கணவனை பிரிந்து வாழ்பவள் என நினைத்து அவளை யாராவது அனுக முயன்றால்,கௌசிக்கு தெரியும் முன் அதை தடுப்பது, இப்போதும் பாலன் பரப்பிய கதை பற்றி ஷக்தியிடம் சொல்வதுடன்,கௌசல்யாவை பற்றி உயர்வாக பேசுவதோடு தவறாக நடக்காதீங்கன்னு எச்சரிப்பது என சிவம் அருமையான மனிதர்:):):).

ஷக்தி சின்ன வயசுல நடந்துட்டதை மறந்து,அவனோடு வாழ்க்கையை தொடங்க நினைத்து இருந்த கௌசிக்கு:sneaky::sneaky:,ஷக்தி தங்களை பற்றி அறிமுகம் செய்து ஆறு வருட பிரிவை பற்றி பேசி எல்லோர் வாயையும் அடைத்ததை கண்டு (ஆனந்த) அதிர்ச்சி தான்;);).

ஆறு வருசமா புருசனை பிரிஞ்சு இருந்த கௌசல்யா,ஷக்தியோட சேரப்போறதை நெனச்சு கிரிஜா சந்தோஷப்படாம,ஓசி சவாரி கிடைக்காதுன்னு வருத்தப்படறாளே:mad::mad::mad:.பஸ்ல போறது ஒன்னும் கஷ்டமில்லை உங்க அம்மா சொன்னதுக்காக வர்றேன்னு சொன்னவ,இனி பஸ்ல தான் போகனும்....

மாப்பிள்ளை விருந்துன்னு உட்கார வச்சு சோறு போட, மாப்பிள்ளையா மறுவீட்டு விருந்துக்கு வந்தானா:sneaky::sneaky:.தாலி கட்டினதும் விட்டுட்டு போனவனுக்கு பேச்சுக்கு ஒன்னும் குறைச்சலில்லை...
அத்தைன்னு கூப்பிட்டதும் இந்திரா இப்படியொரு விருந்து வச்சிருக்க வேணாம்:p:p.இந்த ஆறு மாசத்துல ஷக்தியோட காதலியோ,அவளை பற்றியோ கௌசிக்கு தெரிய வந்தால் என்ன ஆகுமோ.
பெத்தவங்க எப்பயும் அப்படித்தானே மக வாழ்க நல்லா இருக்கணும் என்று மருமகனை தலைல தூக்கி வச்சி ஆடுறாங்க மருமகள பொறுத்து போறாங்க.
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top