அருமையான பதிவு மிலா
.புது மேனேஜர் ஷக்தின்னு, கௌசிக்கு தெரியாதா
.
அடப்பாவி...கௌசல்யா வந்ததும் புது மேனேஜரை மடக்கிட்டான்னு பால முருகன் எல்லார் கிட்டயும் கதை கட்டிட்டானே
.
கௌசல்யா,சிவம் குழந்தைக்கு பணவுதவி செய்ததை மறக்காத சிவம்,கணவனை பிரிந்து வாழ்பவள் என நினைத்து அவளை யாராவது அனுக முயன்றால்,கௌசிக்கு தெரியும் முன் அதை தடுப்பது, இப்போதும் பாலன் பரப்பிய கதை பற்றி ஷக்தியிடம் சொல்வதுடன்,கௌசல்யாவை பற்றி உயர்வாக பேசுவதோடு தவறாக நடக்காதீங்கன்னு எச்சரிப்பது என சிவம் அருமையான மனிதர்
.
ஷக்தி சின்ன வயசுல நடந்துட்டதை மறந்து,அவனோடு வாழ்க்கையை தொடங்க நினைத்து இருந்த கௌசிக்கு
,ஷக்தி தங்களை பற்றி அறிமுகம் செய்து ஆறு வருட பிரிவை பற்றி பேசி எல்லோர் வாயையும் அடைத்ததை கண்டு (ஆனந்த) அதிர்ச்சி தான்
.
ஆறு வருசமா புருசனை பிரிஞ்சு இருந்த கௌசல்யா,ஷக்தியோட சேரப்போறதை நெனச்சு கிரிஜா சந்தோஷப்படாம,ஓசி சவாரி கிடைக்காதுன்னு வருத்தப்படறாளே
.பஸ்ல போறது ஒன்னும் கஷ்டமில்லை உங்க அம்மா சொன்னதுக்காக வர்றேன்னு சொன்னவ,இனி பஸ்ல தான் போகனும்....
மாப்பிள்ளை விருந்துன்னு உட்கார வச்சு சோறு போட, மாப்பிள்ளையா மறுவீட்டு விருந்துக்கு வந்தானா
.தாலி கட்டினதும் விட்டுட்டு போனவனுக்கு பேச்சுக்கு ஒன்னும் குறைச்சலில்லை...
அத்தைன்னு கூப்பிட்டதும் இந்திரா இப்படியொரு விருந்து வச்சிருக்க வேணாம்
.இந்த ஆறு மாசத்துல ஷக்தியோட காதலியோ,அவளை பற்றியோ கௌசிக்கு தெரிய வந்தால் என்ன ஆகுமோ.