ThangaMalar
Well-Known Member
எனக்கு இந்த epi படிச்சு கொஞ்சம் mixed feelings (உமா மாம் HIFI )
அப்புறம் உங்க cmts உம் படிச்சப்புறம்
கொஞ்சம் எனக்கு புரிஞ்ச அளவில ஒவ்வொரு charecterayum
இன்று வரை அவர்களின் எண்ணங்களை வைத்து சொல்லி இருக்கிறேன்
இன்று வரை நான்
சந்திரன் நான்
வளர்ந்து பின் தேயும் அல்ல
தேய்ந்து வளரும் பிறை சந்திரன் நான்
ஆம்
தேய்ந்து போனேன் மகனின் விவாகரத்தால்
வளருவேன் மகனின் மறுவாழ்வால்
பௌர்ணமி ஆவேன் பேரனின் வரவால்
மனைவியின் அழகு கண்டேன்
நண்பனின் பணம் கண்டேன்
மகனின் மனம் தவிர்த்தேன்
மருமகளை மறந்தே விட்டேன்
பேரனை காண தவிக்கிறேன் இன்று
சொல்லின் கூர்வாளால்
வெட்ட தயங்கவுமில்லை நான்
யாரையும் கொட்டவும் தயங்கவுமில்லை
தப்பென்று தோணவில்லை
அது தவறென்று அறியவுமில்லை நான்
அதற்கு காலம் இன்னும் கனியவில்லை
குணத்தை பார்க்கவில்லை
யாரின் குணத்தையும் பார்க்கவில்லை
அதற்கு காலம் இன்னும் கனியவில்லை
Great meera.. Simply superb..இன்று வரை நான்
விமலா
அழகால் வந்தேன் ரோகினியாக
சந்திரனின் ரோகினியாக
வந்தது இரு மகவு
ஆண் மகவு என் நிழலே
அழகிலும் என் நிழலே
என் மகனின் முதலாக
தாயவள் இருக்கிறேன்
மன்னவனோ நிந்தித்தாலும்
என்மகனின் அன்பினாலே
மகிழ்வேன்
சுற்றமே ஆனாலும்
சூழவே இருந்தாலும்
மற்றவர்கள் பின்னே
நானிங்கே முன்னே
இதுவே என் எண்ணம்
அதுவே என் திண்ணம்
மகனின் மணத்தை
பணம் கொண்டு
கண்டிட்டார் என்னவர்
தன்னது மட்டும் அழகாயிருக்க
முன்னவனின் மனைவியோ
அழகியில்லை என் சொல்ல
வெளுப்புமில்லை கறுப்புமில்லை
சுந்தரியின் சுந்தரத்தில்
எனக்கு ஒரு விருப்புமில்லை
பெண்ணவளை வைத்திருக்க
மனதில்லை
இங்க வாழவிடவும்
விருப்பமில்லை
எனக்கும் வாழ விருப்பமில்லை
காரணம் கூறவில்லை
இப்போது காரணம் கூறவில்லை
காத்திருக்க கூறுகிறேன்
சிறிது பொறுத்திருக்க கூறுகிறேன்
என் எண்ணம் கண்டு
பின் பெண் வண்ணம் கண்டு
கூறுவீர் நியாயத்தை
என் பக்க நியாயத்தை
விட்டா மீரா பின்னாடி தொழுவத்துல கட்டியிருக்கற மாட்டுக்கு கூட ஒரு கவிதை எழுதி கொடுத்துடுவா...
பார்த்து கொடு மீரா...
கவிதைன்னு தெரியாம அது சாப்பிட்டுவிட போகுது...
Kidding friend..
Really awesome...