மருது இந்த epi ல கலக்கல்...
ஏதோ அவனோட ஜதியோட குடும்பம் னு வாலன்டியரா போய் நின்னா, ரொம்பத்தான் முறுக்கிக்கிறாரு மாமனாரு...
ஆனால் ஜெயந்தி யோட அம்மா விவரம். அவங்களுக்கு நாட்டு நடப்பு புரியுது. சாதாரணப்பட்டவங்க போலீஸ் ஸ்டேஷன் போய் ஒன்னும் சாதிக்க முடியாது என்று அவங்களுக்கு தெரியுது.
இப்போது நிலைமை தலைகீழ். தான் அவர்களுக்காக காத்திருந்தது போய் அவர்களை தன்னைத் தேடி வரவச்சிட்டான் மருது...கெத்து டா மருது.
அந்த சூழ்நிலை யிலும் ஜெயந்தி எந்த காலை வைத்து உள்ள வர்றான்னு பார்க்கிறது...அம்மாடி! சிரித்து முடியலை...
என்ன சொல்ல அவன் கவலை அவனுக்கு...