முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல்
போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா
முதன் முதலில் பார்த்தேன்...........
நந்தவனம் இதோ இங்கேதான்
நான் எந்தன் ஜீவனை நேரினில்
பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
நொடிக்கொரு தரம் உன்னை
நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க
வைத்தாய்...........
முதற்பார்வை நெஞ்சில்
என்றும் உயிர் வாழுமே
உயிர் வாழுமே
முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
உத்தரவே இன்றி உள்ளே வா
நீ வந்த நேரத்தில் நான் இல்லை
என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன்
வேறெங்கு போனது பாரடி
உன்னில்
உன்னைக் கண்ட நிமிசத்தில்
உறைந்து நின்றேன்
மறுபடி ஒருமுறை பிறந்து
வந்தேன்..........
என் சுவாசக் காற்றில் எல்லாம்
உன் ஞாபகம்.. உன் ஞாபகம்
முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல்
போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை.............
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா
முதன் முதலில் பார்த்தேன்...............