E87 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
இன்னும் நிறைய இருக்கிற மாதிரி இருக்கு..... மூணு எபிசொட் போதுமா ?????
யாராவது ஒரு லிஸ்ட் போட்டா பரவாயில்லை ..... நான் இன்னைக்கு பிஸி .....
நாளைக்கு நான் லிஸ்ட் போடறேன்..... yaaravadhu podunga pa ....
3 1\2 வருட சண்டையை ஒரு எப்பியில் முடித்த திறமை....;)இருக்கே....அதற்கு பிறகு உள்ளதூ சுலபமா எழுதுவாங்க மல்லி சிஸ்...
அப்பாடா பிரச்சனை முடிந்தது....இனி சுப நிகழ்ச்சிகள்...நாணமோ நாணுமோ:Dபுளு ஐஸ் பேபி கன்பார்ம்;) திருப்தியா முடிப்பாங்க சிஸ்...மலர் லிஸ்ட் போட்டுட்டாங்க..:)
 

banumathi jayaraman

Well-Known Member
3 1\2 வருட சண்டையை ஒரு எப்பியில் முடித்த திறமை....;)இருக்கே....அதற்கு பிறகு உள்ளதூ சுலபமா எழுதுவாங்க மல்லி சிஸ்...
அப்பாடா பிரச்சனை முடிந்தது....இனி சுப நிகழ்ச்சிகள்...நாணமோ நாணுமோ:Dபுளு ஐஸ் பேபி கன்பார்ம்;) திருப்தியா முடிப்பாங்க சிஸ்...மலர் லிஸ்ட் போட்டுட்டாங்க..:)
ஹா ஹா ஹா
 

malar02

Well-Known Member
புதிய நாவாலசிரியருக்கு என்று ஒரு பதிவு எழுதி என் facebook கில் பதித்துள்ளேன். யார் கட்டம் கட்ட போகிறார் என்று தெரியவில்லை. இதை பற்றி உங்கள் கருத்தை அறிய ஆசை படுகிறேன் நண்பர்களே




புதிய நாவாலசிரியர் நண்பர்களே,
தொடர்ந்து நான்கு நாட்களா நாவல் படிக்க ஆரம்பிக்கிறேன். படிக்கமுடியாவில்லை. எல்லாம் ஒரே போல் உள்ளது. தனி தன்மை இருக்கவில்லை.இன்று நிறைய ரொம்ப நிறைய பேர் எழுகிறார்கள். இணையம் செய்த சாதனை படிப்பாளிகளை படைப்பாளிகளாக மாற்றியது. இன்று பெரும்பாலரும் நாவல்களை புக் ஆக படிப்பது இல்லை. இணையதில் தான் படிகிறார்கள். வாங்கிய புத்தகம் படிக்கவில்லை என்றால் அந்த புத்தகத்துக்கு செய்யும் துரோகம் என்று எல்லாருக்கும் தெரியும். அதனால் இலவசமாக இணையத்தில் படிகிறார்கள். நல்லாயில்லை என்றால் உடனே வேறு சென்றுவிடுவார்கள்.ஒரு சில புதிய எழுத்தாளரின் முதல் நாவல் நன்றாக இருக்கிறது.ஆனால் இரண்டு,முன்றாவது நாவலில் கோட்டை விடுகிறார்கள். அன்றும் சரி, இன்றும் சரி தனி தன்மை இல்லாதவார்கள் நிலைக்கமாட்டார்கள்.பழைய எழுத்தாளருடைய திறமைகள், ரமணிசந்திரன்{மகிழ்ச்சி முடிவு,சிறந்த குடும்பம் நாவல்} அனுராதாரமணன்{இதயத்துக்கு இதம் தரும் எழுத்து}, இந்துமதி{புதிய சிந்தனை}, சிவசங்கரி{சமுதாயகோபம்}, ராஜேந்திரகுமார்{சற்று களவியல்,ஒரு புதிய எழுத்து {ங்}}, ராஜேஷ்குமார்{கிரைம்}, PKR{கிரைம்,நகைச்சுவை} இன்னும்சொல்லிக்கொடுண்டுபோகலாம். புதியவர்களில் சீத்தாலட்சுமி{நகைச்சுவை, செய்தி} மல்லிகா{உணர்வு,உரிமை}, அமுதவள்ளிகல்யாண்சுந்தரம்{குடும்பகாதல்,கொஞ்சம் சஸ்பென்ஸ்} ஸ்ரீகலா{புதுமை எழுத்து, பிறர் தொடதயங்கும் கரு} பிரேமா{அழகிய குடும்ப உறவு.} லேடி பாலச்சந்தர் எனும் மாலா கஸ்துரிரங்கன், அபிபாலா, சுதாரவி,சுதா சதாசிவம்,எல்சி திவாகர்,சுபாஸ்ரீ, இன்னும் இன்னும் பலர் நினைவில் சடன் என்று வரவில்லை. இவர்கள் அனைவரும் தங்களின் தனி தன்மையால் நிலைக்கிறார்கள்.{நான் குறிப்பிடாதவார்கள் திறமை குறைந்தவார்கள் என்று அர்த்தமில்லை, என் நினைவு குறைபாடு தான் குறை} எனவே தனி தன்மை நாவலில் காட்டுங்கள். ஒரே மாதிரி கரு எடுக்காதீர்கள். இது ஒன்றும் குறை இல்லை., பழைய நாவலில் ரமணிசந்திரனின் வீடு வந்த வெண்ணிலவும், காஞ்சன ஜெயதிலகரின் ஆனந்தம் என்னடி ஆனந்தி என்ற நாவல்கள் ஒரே கரு, ஆனால் இருவரும் கதை அமைப்பில் மாற்றம் செய்து இருப்பார்கள். அதுபோல்தான் கூறுகிறேன். முன்பு ஒரு நாவலை நான்கு எழுத்தாளர் எழுதுவர்கள், யார் எந்த பகுதி எழுதியது என்று கண்டுபிடித்தால் பரிசு தருவார்கள். இன்று அந்த போட்டி வைத்தால் குழப்பமே. இது யாரையும் குறை சொல்ல எழுதிய பதிவு இல்லை. உங்கள் வளர்ச்சிகாக எழுதியது. பழைய வாசகன் என்ற முறையில் கூறலாம் தானே சகோதரிகளே.
நீங்கள் சொல்வது ஒருவிதத்தில் சரிதான் bro.. தனி தன்மையை கொண்டு வருவது அவ்வ்ளவு சுலபம் இல்லை அதற்கு ஆழ்ந்த கவனிப்பு திறன் வேண்டும் அதற்கு முழு முனைப்பு வேண்டும் இங்கு குப்புற வீழ்ந்தாலும் மூக்கு உடையலை என்று சொல்பவர்கள் தான் அதிகம் நிங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்துக்கள் கவனிக்க வாயந்தாதக இருப்பது அவர்களின் கவனிப்பு திறன்... தான் செய்யும் செயலை நேசிப்பது கர்வம் அற்று .........படிப்பவர்கள் எல்லாம் பாஸ் ஆகிவிடுகிறார்களா ? அது போல்தான்
 

malar02

Well-Known Member
:)[/QUOTE]
EPISODE 87 PART 2

வாதங்கள்
வாய் வார்த்தையாகட்டும்
என் விருப்பமாய்
உன் வலிகள் கூடட்டும்
இங்கிதமற்ற
நாட்களும்
இசைவு இல்லா
நிகழ்வுகளும்
இருந்தும்
என் மன சுவடுகள்
உன் நிழலை ஒட்டியே
 

Adhirith

Well-Known Member
EPISODE 87 PART 2

வாதங்கள்
வாய் வார்த்தையாகட்டும்
என் விருப்பமாய்
உன் வலிகள் கூடட்டும்
இங்கிதமற்ற
நாட்களும்
இசைவு இல்லா
நிகழ்வுகளும்
இருந்தும்
என் மன சுவடுகள்
உன் நிழலை ஒட்டியே
[/QUOTE]

Part 2
பதினொன்று வரிகளில்
கவிதையாய்
அருமையாய்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top