E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பிழைக்கும் வழி



—–அறிவும‌தி—– கவிதைகள்
.
மொன்னைத் தமிழனே!
முதலில் அன்னைத்
தமிழை
அறவே
மற! மற!
பிழைக்க வேண்டுமா?
ஆங்கிலம்கற்றுக் கொள்!
அது போதுமா என்றா
கேட்கிறாய்!
போதும்!
போதும்!
அது மட்டும்
போதும்!
ஆனால்
உயிர்
பிழைக்க வேண்டுமா?
மும்பை என்றால்
மராத்தி
கற்றுக் கொள்!
கர்நாடகம் என்றால்
கன்னடம்
கற்றுக் கொள்!
கொழும்பு என்றால்
சிங்களம்
கற்றுக் கொள்!
கவிதை
—–அறிவும‌தி—–
.
மொன்னைத் தமிழனே!
முதலில் அன்னைத்
தமிழை
அறவே
மற! மற!
பிழைக்க வேண்டுமா?
ஆங்கிலம்கற்றுக் கொள்!
அது போதுமா என்றா
கேட்கிறாய்!
போதும்!
போதும்!
அது மட்டும்
போதும்!
ஆனால்
உயிர்
பிழைக்க வேண்டுமா?
மும்பை என்றால்
மராத்தி
கற்றுக் கொள்!
கர்நாடகம் என்றால்
கன்னடம்
கற்றுக் கொள்!
கொழும்பு என்றால்
சிங்களம்
கற்றுக் கொள்!
மிகவும் அருமையாக இருக்கு, சகோதரரே
 

arunavijayan

Well-Known Member
திரை விலகும் நேரம் வந்துவிட்டது...
அழகு மீரா...
நீயும் பாத்தியும் ஒவ்வொரு எப்பிக்கும்
கவிதையில் வாழ்த்து போட்டு ....
கதையின் ரசிகைகள்(மல்லி)
என்றும் அழகா உணர்த்துறீங்க இருவரும்:)
images (11).jpg
 

arunavijayan

Well-Known Member
காதலாய் கசிந்துருகவில்லை..
மாய கண்ணனுமில்லை..
பார்த்த நாள் முதல் பித்தனாக்கிய
காதல்..

வலிகளை கொடுத்ததை
உணரவில்லை..
உணர்ந்ததெல்லாம்..
நீ எனக்கானவள்
என்பதை மட்டுமே..


உன் அருகில் இருக்கும்
வாழ்வே வேண்டுமடி..
உன் மன வேதனை தீர.
ரண வேதனை தாங்கும்
இதயமடி..
images.jpg
 

arunavijayan

Well-Known Member
வலி கொடுத்தாய்
வழியே கொடுத்தாயோ
உடல் வலி கொடுத்தாய்
அதன் வழி
உன் வழி சேர
ஒரு வழி கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிர் கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிரும் எடுத்தாய்
மறுவார்த்தை பேசேன் நான்
பின்னே வந்திடுவேன்
உன்னை அறியேன் நான்
ஆனாலும்
உண்டெனக்கு காதலுமே
ஒரு ஆழி காதலுமே
கண்மூடிக்காதலா அது
கண்மூடும் முன் போகாது
வழித்துணை நீ இருந்தால்
வலிதனை மறக்கலாம்
மறைக்கலாம்
வேறுதுணை வேண்டாமே
உன்துணை இருந்தாலே
பழங்காதல் உண்டென்றாய்
பழங்காதல் அல்ல அம்மா
அது பலமான காதல் அல்ல
அது காதல் என்றெண்ணி
கன்னியிடம் சரியென்றேன்
நீலவிழி காணும் முன்னே
காத்திருக்க சொல்லிருந்தேன்
ஏமாற்றம் என்றாயே
ஏமாற்றம் இல்லையது
என் மாற்றம் என்பேன் நான்
உன்னை கண்டு மாறியதால்
தடுமாற்றம் வந்ததுவே

கண் வழி வந்த மாற்றம் இது தடுமாற்றம்
இப்போது NO மாற்றம்
images (8).jpg
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உன்னுடணான போராட்டங்களில்
சலித்து துவளுகையில்
உன் மென்தீண்டலில்
உயிர்த்தெழுகிறேன் நான்...
உன்னில் தொலைந்த என்னை
மீட்டெடுக்கவே
மீண்டும் மீண்டும்
மூழ்கிப்போகிறேன் நான்....
நீயில்லாமல் நான்
நானில்லாமல் நீ
பொருளில்லா சொல்லடுக்குகள்..
குழந்தையாய் குழையும் பொழுதும்
ராட்க்ஷசியாய் ரணப்படுத்தும்போதும்
என் காதலியாகவே காண்கிறேன் உனை......
நீ அமுதமா விஷமா
அளவுக்கு மீறி அருந்த துடிக்கும்
எனக்கு இரண்டுமே ஒன்று தான்...
என் உமையே என்னை
எனக்கு புரியவைக்கவேனும்
நீ
என்னை புரிந்து கொள்....
அடுத்த கவிஞர் ...........கோமதி.
அழகு ..அருமை..
 

arunavijayan

Well-Known Member
மல்லி,இனிய காலை வணக்கம்.....

அவளின்...
எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம்
அதனால் விளைந்த சினம்
சினத்தினால் ஏற்பட்ட தனிமை
தனிமை தந்த வெறுமை
வெறுமையினால் வந்த இயலாமை
வெளிப்படுத்த முடியா உணர்வுகள்
அதனால் ஏற்படும் மனப் போராட்டங்கள்...
அவற்றின் காரணகர்த்தாவான அவனின்
மீது ஏற்படும் கட்டுக்கடாங்க கோபத்தை
வன்முறை தாக்குதலாக வெளிப்படுத்துகிறாள்....

வன்முறையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்
வர்ஷினியின் இந்த பரிமாணம் எதிர் பாராத ஒன்று...


உணர்வுகளை கையாளுவதில்,கொண்டுவருவதில்
You are so different.....Malli..

Emotionally well balanced ,an unique episode....
உங்களால் மட்டுமே சாத்தியமாகும் ஒன்று....
Wishes with thanks...


happpppy Sunday ....:)








images (9).jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top