Hi mam
கதையை எங்களுக்கு நிறைய ஊகங்களுக்கு விட்டுவிட்டு,நாங்கள் என்னென்னவோ எழுதுகின்றோம் பேசுகின்றோமோ,அதற்கு நேர்மாறான நிகழ்வுகளை வெகு நேர்த்தியாக அடுத்து என்னவென்று ஆர்வத்தை தூண்டும்படியாக கொண்டு செல்கின்றீர்கள்,அன்று காலையில் சுந்தரிக்கு உடனடி உதவி செய்ய யாருமேயில்லை,பதட்டத்தில் கொதிநீரை தவறவிட்டு,அது காலில் பட்டு,வலியைக்கூட உணரமுடியாமல் ,அதேநேரம் அபராஜிதனை அந்தநீருக்குள் வராமல்தூக்கி,பாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதற்கும் உதவுவதற்கு ஆளை அழைத்து,இப்படி ஒரே நேரத்தில் எவ்வளவு கஸ்ரம்,தனியொரு பெண்ணாக அழகாக சமாளித்தலும் அந்நேரம் தனிமையின் கொடுமையையும் அல்லவா அனுபவித்தனர்,அந்த நேரம் எவ்வளவு வலியோடும் பதட்டத்தோடும் இருந்திருப்பார்.இனி என்ன செய்வது என்ற பதட்டத்துடன் கூடிய தனிமை மிகக்கொடுமையானது ,அவ்வளவு பதட்டத்திலும் குழந்தையை சுடுதண்ணிக்குள் விடாமல், தான் அந்த தண்ணீருக்கு மேலால் நடந்துபோய் குழந்தையை அவ்விடத்திலிருந்து அகற்றினார்அதுதான் தாய்மை,தாய்மைக்கு நிகர் தாய்மைதான்,காலையில் சுந்தரிக்கு யாருமேயில்லை பின்னேரம் அவரைசுற்றி அவ்வளவு உறவுகளும் பதட்டத்தோடும் உதவும் மனப்பான்மையோடும்,வலியோடு தனிமை பயத்தோடும் இருந்த சுந்தரிக்கு இனிய அதிற்சி ,பட்டினியோடு இருந்தவன் முன்னால் அறுசுவை உணவு படைத்ததுபோலிருந்தது எல்லோரதும் வருகை,சுந்தரி இந்நிகழ்வு நடக்கும் முன்பே கண்ணனை தேடினார் அல்லவா,ஒவ்வோருகிழமையும் விடாது வந்த கண்ணன் எங்கேயென்று,இனிமேல் வரமாட்டாரோ என்றும்,ஒருவித தவிப்பு இருந்தது கண்ணன் வந்துவிடமாட்டாரோ என்று,ஒத்துக்கொள்ளத்தான் மனதும் கடந்தகால நிகழ்வும் விடவில்லை,கண்ணன் அடிக்கடி படையெடுத்து வந்தது அவருள் அவர் உணராமலே மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றது,அன்று காலைச்சம்பவமும் சுந்தரியை சற்று யோசிக்கச்செய்யுமென்று நினைக்கின்றேன் ,ஏனெனில் தனிமையில் இருக்கும் ஒருவருக்கு ஒரு துன்பம் வரும்போதுதான்,அந்த இக்கட்டான சூழ்நிலையில் மனம் தானாகவே உறவுகளைத்தேடும்,அன்றய சூழ்நிலை சுந்தரியை ரொம்பவே பயமுறுத்தியிருக்கும்,இனி சுந்தரியின் தனிமைவாழ்க்கையின் மீதான பார்வை மாறுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உண்டு,கண்ணன் சுந்தரிக்கு எவ்வளவு இதமாக பார்த்துப் பார்த்து செய்கின்றார்,விமாலா அவர்களுக்குள்ளும் நல்ல மாற்றம்,வேலையில்லாத கண்ணனுக்கு சுந்தரி வேலை கொடுப்பார்களா,எதற்காக கண்ணன் வேலையை விட்டார் என்பதை உணர்வார்களா,இன்றய நாள் ஆரம்பத்தில் வலியோடு தொடங்கி இதமான இனிய அதிற்சியோடு நிறைவடைந்தது.
நன்ற
Aravin22