சித்திரை மாதம்
கத்திரி வெயிலில்
நித்திரையின்றி தவிக்கின்றோம்...
அந்த வானம் சாட்சியாக
நிலவு சாட்சியாக
இந்த பூமிக்கு நீயும் வந்துவிடு...
மழையே ...ஓ...மழையே...
வானெங்கும் நீலம்
பால்நிலாக் கோலம்..
வீதியுலா அவள் வருகையில்
பூச்சிதரலாய் நட்சத்திரம்
பன்னீர் தெளிக்க தோழியவள்?
இதோ வந்தாளே மாரியிவள்..
வந்து தந்தாளே..
அக மகிழ்ச்சி
புற குளிர்ச்சி...