படம் பார்த்து கவிதை சொல் - 2

Advertisement

Sasideera

Well-Known Member
யாரும் அறியாமல் என்(வானம்)தாபம் தீர்த்த என்னவளின் (பூமி) இதழ் தேனை(மழைத்துளி) , அள்ள குறையாத காதலோடு அவளிதழ் நான் இணையும் போது இந்த வெள்ளி(நிலா) பெண் வெட்கமில்லாமல் வெளிச்சம் போட்டு காட்டி விட்டாள்!!!!:love::love::love:
 

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
வானை
இருள் சூழ்ந்திருக்க
இருளிற்கு காரணம்
இரவு நேரமா..
கார்மேகமா...
என்றறிய
திணறிய என்மேல்
சிறிது
இரக்கம் வரப்பெற்ற
மழை மேகங்களோ
இத்தனை நேரங்களாக
தன்னுள்
துள்ளிக்குதித்திருந்த
அந்த வைர நிற
நீர்த்திவலைகளை
ஓவென பொழியச்செய்ய
அதில் லயித்து
ஈர மண்ணில்
நான் நடை பயில
எனக்கு போட்டியாய்
ஈர வானில்
உலா வந்தது
முழு நிலவு...
 
மழை நீ வரும் போதும் வந்து சென்ற பின்னும் உன் தடத்தை ஆழமாக அழுத்தமாக பதிவு செய்கிறாய்
நிலவு தன் அழகில் கர்வம் கொண்டு ரசித்திருக்கும் போது
உன் சிறு தூரலும் சாரலும் எவ்வளவு அழகென்று உணர்த்தி நின்றது அழகென்று நாம் இன்று நினைப்பது எப்பொழுதும் மாறக்கூடிய மாற்றத்திற்கு உட்பட்டதென்று உணர்தது நிலவு .தேவிசரண்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top