naveensri
Well-Known Member
விளம்பரம் எல்லாம் ரொம்ப நல்ல இருக்கும் ஆனா சீக்கிரம் முடிஞ்சுரும் நான் அந்த மீனிங்ள சொன்னேன்நன்றி
விளம்பரம் எல்லாம் ரொம்ப நல்ல இருக்கும் ஆனா சீக்கிரம் முடிஞ்சுரும் நான் அந்த மீனிங்ள சொன்னேன்நன்றி
நன்றி அக்காThirller movie effect dear
Ezhutha vantha sila pala irukum ... Na atahlam consider pannamatrnவிளம்பரம் எல்லாம் ரொம்ப நல்ல இருக்கும் ஆனா சீக்கிரம் முடிஞ்சுரும் நான் அந்த மீனிங்ள சொன்னேன்
நன்றிNice....
யாருப்பா அந்த வில்லன்?ஏரிக்கரை 4 :
மங்களான ஒளியை அவ்வறையில் பரவ வைத்திருந்த அச்சிறு பல்பு , ஒரு பெரிய டேபிள் , பக்கத்துல ஒரு குட்டி சேர் அதுல இருந்த ட்ரேயில் துருப்பிடித்த பிளேடு துண்டுகள் சில . அவ்வளவு தான் அவ்வறையில் இருந்த பொருட்கள்.
அவ்வறையின் கதவை திறந்துகொண்டு மெல்லிய உடல்வாகுடன் வந்த அவன் தன் முகம் முழுவதும் நீலமும் சிவப்பும் கலந்து ஏதோ ஒரு திரவம் பூசியிருந்தான் . அது அவன் முகத்தை மிக கொடூரமாய் காட்டிக்கொண்டிருந்தது .வந்தவன் அங்கிருந்த பிளேடு துண்டுகளை ஆராய்ந்து பின் அதில் மிகவும் துரு பிடித்தது போல் இருந்ததை எடுத்தவன் ஒரு வித ரசிப்புடன் அதை தன் கன்னத்தில் தடவி பார்த்தான் ..அதில் கன்னத்தில் சிறு கீறல் பட்டு இரண்டு ரத்த துளிகள் அந்த பிளேடில் விழுந்தது . அதை கண்டு உனக்கு என்ன பிடிச்சிருக்கா என குரலில் உணர்வறியா பாவத்துடன் கூறியவன் எனக்கும் உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு இன்னும் ரெண்டு நாளைக்கு நீ என்கூடவே இருக்க போற என்றவனின் கண்கள் இரண்டும் அவ்வறையின் மங்கலான ஒளியில் வேட்டையாட போகும் சிறுத்தையின் கண்களாய் பளபளத்தது ..... அடுத்த நொடி அவ்வறையே அதிரும் வண்ணம் ஹாஹாஹாஹா என சிரித்தவனின் சிரிப்பு அவ்வறையில் மிக பயங்கரமாய் எதிரொலித்தது . எத்தகைய தைரியம் வாய்ந்தவர் அவ்விடத்தில் இருந்திருப்பினும் அவனது இச்சிரிப்பிலே நடுங்கி அவரது இறுதி நொடியை எண்ணியிருப்பர் . அந்த மங்கலான வெளிச்சத்தில் , முகம் முழுக்க நீலமும் சிவப்பும் கலந்த நிறத்தில் கன்னத்தில் ரத்தகாயமும் கண்களில் சிறுத்தையின் பளபளப்பும் என அவனது இக்கோர சிரிப்பு தனது அடுத்த வேட்டைக்கு அவன் தயார் என்பதை சொல்லாமல் சொல்லியது .
.............................................
முகில் , ஆனா
அரசு , அதுக்கு முன்னாடியே அதாவது மீன்கள் தின்பதற்கு முன்பே அவர்களோட உடல்ல சின்ன சின்னதா ஆழமான காயங்கள் ம்கூம் கீறல்கள்னு தான் சொல்லணும் கிட்டத்தட்ட 108 கீறல்கள் இருந்துருக்கு ....
அரசு , அவங்க போஸ்ட்மார்ட்டம் அ ஒரு போர்மாலிட்டி காக மட்டுமே நடைதிறக்காங்க முகில் அதான் அதுல இந்த காயங்களை அதிகமா சோதிக்கலை . அதுவும் இல்லாம அவங்க எல்லோரும் தண்ணில மூச்சுக்கு திணறி தான் இறந்துருக்காங்கனு ரிப்போர்ட் சொல்லுது .
முகில் , பாஸ் இப்போ தான் ஏதோ கீறல்கள் னு சொன்னிங்க இப்போ தண்ணில மூழ்கி செத்ததா சொல்றிங்க அப்போ இது தற்கொலை தானா?
அரசு , நீ லூசுன்னு அடிக்கடி நிரூபிக்காத டா அவங்க தண்ணில மூழ்கி செதுக்கங்கறது சரிதான் .அவங்க தானா தண்ணில குதிச்சிருந்தா எப்படிடா அவங்க உடல்ல கீறல்கள் வந்திருக்கும் .
முகில் , அப்போ அந்த காயங்கள் எப்டி வந்ததுன்னு கண்டுபிடிச்சா கேஸ் சால்வ்டு அப்படித்தான பாஸ்.
அரசு , நான் இன்னும் முடிக்கல முகில் ....அந்த கீறல்கள் மேல மீன்கள் தின்பத்திற்கு முன்பு அந்த காயங்கள் ஏற்பட்ட பின்பு வேற எதோ நடந்துருக்கு அதுல அந்த உடல்கள் இன்னும் சிதைஞ்சிற்கு .....
பேசிக்கொண்டிருந்தவன் தன்னை விழிகள் தெறிக்க பார்த்துக்கொண்டிருந்த முகிலை கண்டு அவனின் தோளில் தட்டி டேய் முழிச்சது போதும் நீ போன விசாரணை என்னாச்சி சொல்லு ???
-------------------------------------------
என்னப்பா தெரியலை,மா எனக்கு எதுவுமே தெரியல