ஹாய் விஜி அக்கா,
கதை ரொம்ப நல்லா இருந்தது. ஆரம்பத்தில் குரு காட்டுற கெத்து என்ன கடைசியில் இந்திராவின் மீது காதல் வந்ததும் அவனின் உருகல் என்ன எல்லாம் சூப்பரா இருந்தது.மகனின் விருப்பம் தெரிந்தும் அவன் நினைத்ததை நடத்தி கொள்வான் என்று தெரிந்தும் அவனின் அப்பா இப்படி பிளான் போட்டு சொதப்பிட்டாரே.சுபாஷ் இப்படி ஒரு சுயநலவதியாவா இருப்பான்.ஏதாவது ஒரு சூழ்நிலையிலாவது அம்மா தங்கை பற்றி யோசித்து இருப்பானா?.கடைசியில் அம்மாவை அவமானப்படுத்தியாவது தான் நினைத்ததை அடைய அவன் செய்யும் செயல் இப்படியும் ஒரு மகனா அப்படின்னு வெறுப்பு தான் வருது. தன்னோட மனைவியின் மனநிலையையும் அவனுக்கு ஏற்ற மாதிரி எப்படி மாற்றிவிட்டான்.கடைசியில் அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ரொம்பவே அதிகம்.இந்திரா ரொம்ப அமைதியான பொண்ணு அண்ணா ஒண்ணும் செய்யவில்லை என்றாலும் அவன் மேல் பாசம் வைத்திருப்பவள்,குருவை அவன் நிறைகுறைகளோடுஏற்று கொண்டவள் அப்படின்னு நினைத்தால் கடைசியில் அவளுடைய அதிரடி பேச்சை கேட்டு அசந்துட்டேன்.நல்லா திருப்பி கொடுத்துவிட்டாள்.குருவின் அதிரடி முடிவுகூட ரொம்ப சரி.