தென்றல் – 21 ( promo )
“இன்னைக்கு அவங்கப்பாக்கிட்ட ரெண்டுல ஒன்னு நன் கேட்டே தீருவேன்...” தனம் கோபத்தில் எரிமலையென வெடித்துக்கொண்டிருந்தார்.
“அம்மா ப்ளீஸ் யாருக்கும் சொல்ல வேண்டாம். அஷ்மி இங்க இல்லைன்றதோ நம்மக்கிட்ட சொல்லாம அவ வீட்டை விட்டு போனதோ யாருக்காவது தெரியவந்தா நான் மனுஷனா இருக்கமாட்டேன்...”
“குடும்பத்தை பத்தி வாழவந்த வீட்டை பத்தி எந்த கவலையும் இல்லாம போய்ட்டா. அவளை காப்பாத்த நீ ஏன்டா நினைக்கிற? உன்னோட சந்தோஷத்துக்காக தான் அவளை நான் ஒன்னும் சொல்லாம இருந்தேன். அதுவும் தாயில்லாத பொண்ணுன்னு நினைச்சு பாத்துக்க நினைச்சா அவ நம்மளையே அசிங்கப்படுத்திட்டு போய்ட்டாளே? இத சும்மா விட சொல்றியா?...”
“விட்டு தான் ஆகனும். நானே சொல்றேன் உங்களுக்கு என்ன? பேசாம இருக்கனும்னு சொல்றேன்ல. இருங்க. இல்லைன்னா நானும் எங்கையாவது போய்டறேன். போகவா?...” என்று அவன் அதட்டிய அதட்டலில் தனத்தின் விழிகளில் நீர் கோர்த்துவிட்டது.
---------------------------------------------------
வாழ்க்கையில் அனைத்தும் முடிந்துவிட்ட உணர்வு. இனி அடுத்த நொடியை கடக்கமுடியாத அளவுக்கு மூச்சுமுட்டு சுமை அவனின் நெஞ்சினில்.
அவ்வளவு தானா? இதுவரை எதுவும் அவளே தான் இனி என்றிருந்த அவனுக்கு அனைத்தும் அவ்வளவு தானா என்று தோற்றம் அரும்ப தொடங்கியது.
உடைந்து சிதறி அனைத்தும் முடிந்தது என நினைக்கும் பொழுதில் வாழ்வின் வெளிச்சதுகள்களாய் அவள் பிம்பம்.
அத்தனை வேதனையிலும் புன்னகைத்தான் பிரசாத்.
காரணம் அவனின் அறையின் நிலைகண்ணாடியில் லிப்ஸ்டிக்கால் எழுதி அஷ்மி சொல்லியிருந்த விஷயம்.
“உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.”
-----------------------------------------------------
பரந்த வான்வெளியில் இயந்திரபறவையில் பறந்துகொண்டிருந்தவளின் இதயம் சிறகடிக்க இயலாது சுருண்டுகிடந்தது.
கண்ணை மூடிக்கொண்டு சாய்ந்து அமர்ந்திருந்தவள் யாரையும் பார்க்க விருப்பமின்றி இருந்தாள். உண்மையில் சுற்றிலும் யாரையும் பார்க்கமுடியாது விழிமலர் கவிழ்ந்திருந்தாள்.
காணும் திசையெங்கும் கடக்கும் மாந்தர்கள் யாவரிலும் அவனின் நிழல் நிஜமாய் அவளை மனதால் அணுகியது. இந்தளவிற்கா அவனை விரும்பியிருக்கிறோம் என ஆச்சர்யமுற்று போனாள்.
தன்னில் சரிபாதியாக இல்லை, தன்னுடலின் குருதியாக இல்லை, உயிரின் பகுதியாக அதுவும் இல்லை, நாடி நரம்பிலும் உயிர்ப்பாக இல்லவே இல்லை,சுவாசத்தின் துடிப்பாக எதுவுமே இல்லை.
இவைகளில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தான் ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவனின் நினைவு அவளில் அப்படி இல்லையே.
அவளையே அவனாக அல்லவா உணர்ந்தாள். இதுவாக இப்படியாக என பிரித்துப்பார்க்கவியலாத உடலின் மனதில் ஒரு பகுதியாக பிரிக்க விரும்பாத அவள் அவனை விட்டுவிட்டு வந்திருக்கிறாள்.
“இன்னைக்கு அவங்கப்பாக்கிட்ட ரெண்டுல ஒன்னு நன் கேட்டே தீருவேன்...” தனம் கோபத்தில் எரிமலையென வெடித்துக்கொண்டிருந்தார்.
“அம்மா ப்ளீஸ் யாருக்கும் சொல்ல வேண்டாம். அஷ்மி இங்க இல்லைன்றதோ நம்மக்கிட்ட சொல்லாம அவ வீட்டை விட்டு போனதோ யாருக்காவது தெரியவந்தா நான் மனுஷனா இருக்கமாட்டேன்...”
“குடும்பத்தை பத்தி வாழவந்த வீட்டை பத்தி எந்த கவலையும் இல்லாம போய்ட்டா. அவளை காப்பாத்த நீ ஏன்டா நினைக்கிற? உன்னோட சந்தோஷத்துக்காக தான் அவளை நான் ஒன்னும் சொல்லாம இருந்தேன். அதுவும் தாயில்லாத பொண்ணுன்னு நினைச்சு பாத்துக்க நினைச்சா அவ நம்மளையே அசிங்கப்படுத்திட்டு போய்ட்டாளே? இத சும்மா விட சொல்றியா?...”
“விட்டு தான் ஆகனும். நானே சொல்றேன் உங்களுக்கு என்ன? பேசாம இருக்கனும்னு சொல்றேன்ல. இருங்க. இல்லைன்னா நானும் எங்கையாவது போய்டறேன். போகவா?...” என்று அவன் அதட்டிய அதட்டலில் தனத்தின் விழிகளில் நீர் கோர்த்துவிட்டது.
---------------------------------------------------
வாழ்க்கையில் அனைத்தும் முடிந்துவிட்ட உணர்வு. இனி அடுத்த நொடியை கடக்கமுடியாத அளவுக்கு மூச்சுமுட்டு சுமை அவனின் நெஞ்சினில்.
அவ்வளவு தானா? இதுவரை எதுவும் அவளே தான் இனி என்றிருந்த அவனுக்கு அனைத்தும் அவ்வளவு தானா என்று தோற்றம் அரும்ப தொடங்கியது.
உடைந்து சிதறி அனைத்தும் முடிந்தது என நினைக்கும் பொழுதில் வாழ்வின் வெளிச்சதுகள்களாய் அவள் பிம்பம்.
அத்தனை வேதனையிலும் புன்னகைத்தான் பிரசாத்.
காரணம் அவனின் அறையின் நிலைகண்ணாடியில் லிப்ஸ்டிக்கால் எழுதி அஷ்மி சொல்லியிருந்த விஷயம்.
“உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.”
-----------------------------------------------------
பரந்த வான்வெளியில் இயந்திரபறவையில் பறந்துகொண்டிருந்தவளின் இதயம் சிறகடிக்க இயலாது சுருண்டுகிடந்தது.
கண்ணை மூடிக்கொண்டு சாய்ந்து அமர்ந்திருந்தவள் யாரையும் பார்க்க விருப்பமின்றி இருந்தாள். உண்மையில் சுற்றிலும் யாரையும் பார்க்கமுடியாது விழிமலர் கவிழ்ந்திருந்தாள்.
காணும் திசையெங்கும் கடக்கும் மாந்தர்கள் யாவரிலும் அவனின் நிழல் நிஜமாய் அவளை மனதால் அணுகியது. இந்தளவிற்கா அவனை விரும்பியிருக்கிறோம் என ஆச்சர்யமுற்று போனாள்.
தன்னில் சரிபாதியாக இல்லை, தன்னுடலின் குருதியாக இல்லை, உயிரின் பகுதியாக அதுவும் இல்லை, நாடி நரம்பிலும் உயிர்ப்பாக இல்லவே இல்லை,சுவாசத்தின் துடிப்பாக எதுவுமே இல்லை.
இவைகளில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தான் ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவனின் நினைவு அவளில் அப்படி இல்லையே.
அவளையே அவனாக அல்லவா உணர்ந்தாள். இதுவாக இப்படியாக என பிரித்துப்பார்க்கவியலாத உடலின் மனதில் ஒரு பகுதியாக பிரிக்க விரும்பாத அவள் அவனை விட்டுவிட்டு வந்திருக்கிறாள்.
எந்த பக்கம் பார்க்கும் போதும் கண்ணில் உந்தன் பிம்பங்கள்
கண்ணில் ஏதும் கோளாறில்லை கண்ணா என்னை நம்புங்கள்
இந்த உறவும் வாழ்க
பிரிவும் வாழ்க
வலிகள் வாழ்கவே