eview
அருமையான பதிவு , இந்த கதை பதிவுகள் படிக்கும் போது நான் எங்கள் கிராம வாழ்க்கையை நினைத்து பார்க்கும்படி இருந்தது அருமை,
குணாவிடம் தச்சன் பேசுவது நகைச்சுவையாகஇருந்தது அருமை,
குந்தவை வேளைக்கு போவதினால் ஏற்படும் சிக்கல்கள்,பாதுகாப்பின்மை பட்றி நீலா பேசுவது எவ்வளவு வாசுத்துவமான பேச்சோ, அதே மாதிரி குந்தவை பேசுவதும் இப்ப உள்ள சூல்நிலையில் உண்மையானதும் கூட பயந்துகிட்டே இருந்தால் வீட்டில் அடைபட்டுத்தான் கிடக்க வேண்டும், பெண்ணுக்கு தன்னம்பிக்கை, தைரியம் இருக்க வேண்டும் தான், ஆனால் சூழ்நிலையையும் பார்க்கணும் இப்ப உள்ள சமூகத்தில் பெண் குழந்தையில் இருந்து, முதியவர்வரை, மானம், உயிர் பங்கம் விளைவிக்க கூடிய மனித உருவில் இருக்கும் ராட்சர்கள் உள்ள காலம், என்று தான் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள காலமாக மாறுமோ, எவ்வளவு தான் முன்னேற்றம் கண்டாலும், பெண்கள் பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்படுமோ, இன்னும் குற்றங்கள் பெருகிகொண்டுதான் இருக்கின்றன, இதற்கு அவர்கள் பாதுகாப்பு, தைரியம், அவர்கள் கையில் தான் உள்ளது, நம்மளே நாமே பாதுகாத்து கொண்டால் தான் உண்டு,
ராஜராஜன் குந்தவையிடம் வானதியை பட்றி கேட்பதும், அவள் குழந்தைகளுக்கு பரிசை கொடுக்க வேண்டும் என்று முகவரி கேட்பதும், இப்பொழுது குந்தவைக்கு என்ன, எதுன்னு யோசிக்க தோணுது, பார்ப்போம் ராஜன் மனதில் என்ன நினைக்கிறான், வானதி வாழ்வு சீராகுமா, குந்தவை விவசாய வாழ்வில் அவளால் நிலைத்து நிற்க்க முடியுமா பார்ப்போம் என்ன செய்ய போகிறாள் என்று,
மாற்றம் ஒனென்றே மாறாதது
தச்சன், குந்தவை, ராஜராஜன், வானதி இவர்கள் வாழ்வில் காலம் என்ன மாற்றத்தை செய்ய காத்திருக்கிறதோ, நல்லவையா, அல்லவையா