வணக்கம் தோழமைகளே,
ஒரு வழியா உங்களோட தொடர்ந்த ஆதரவுல செவ்வந்தி பூவெடுத்து மாலையா தொடுத்து முடிச்சிட்டேன்...
மத்த கதையை விட இது நெறைய பேரை படிக்க வைச்சது, கதை நல்லா வந்திருக்குன்னா அதுக்கு கண்டிப்பா நீங்க எல்லாரும் தான் காரணம். உங்களோட கருத்துக்கள் தான் கதையோட ஓட்டத்தையே தீர்மானிச்சது.
அடுத்தடுத்த ட்விஸ்ட் நான் வைச்சாலும் நீங்க யோசிக்காததை வைக்கணும்ன்னு நான் ரொம்ப யோசிச்சிருக்கேன்... உங்களையும் யோசிக்க வைச்சுட்டேன்னு உங்களோட கருத்துக்களை படிக்கும் போது தெரியும்...
பானுக்கா உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் எதுக்குன்னா நீங்க சொன்ன அசமஞ்சத்தை வைச்சு நான் ரெண்டு பதிவை ஒட்டிட்டேன்... ஏன் சொன்னீங்கன்னு உங்ககிட்ட கேட்டாலும் அந்த பேரு எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு... அசமஞ்சத்துக்கு நன்றி அக்கா...
சவீதா முருகேசன்