அப்போ காஞ்சனமாலா சங்கரனின் மகளா?
விஸ்வகர்மா கனகவேல் தாத்தாவின் பேரன் இல்லையா?
கனகு தம்பி கதிர்வேல், குமரன் இவர்களின் பேரனா?
குமரன் தாத்தாவுக்கும் வேலுவுக்கும் என்ன ஆச்சு?
வேலுவின் மகன் எதுக்கு கனகவேல் தாத்தா வீட்டில் செந்தில்வேல் மகனா வளரணும்?
வேலு, தேவி இருவரும் எங்கே?
கதிர்வேல் என்னவானார்?
செந்தில்வேல் உங்கப்பா இல்லைன்னு காஞ்சனா கூட சொல்லுறாளே
அப்போ இவளுக்கு உண்மை தெரிஞ்சிருக்கு
குமரனின் மனைவி பாட்டி சொல்லியிருப்பாங்களோ?
சங்கரனும் அவர் மனைவியும் என்னவானாங்க?
அப்பாவும் பெரியப்பாவும் செய்யும் திருட்டு புரட்டு வேலைகள் வேலுவுக்கு பிடிக்கலை
குமரன் அப்பாவியான ஒரு வெள்ளந்தி மனிதர்
சங்கரனுக்கு அத்துணை சமத்து போறாது போலவே
இதனால் தேவிக்கும் சங்கரனுக்கும் சொந்தமான சொத்துக்களை கனகவேல் தாத்தாவும் அவன் பிள்ளைகளும் ஆட்டையைப் போட்டுட்டாங்களா?
அப்பவே குமரனின் மச்சான் கடையில் திருடினவங்க இப்போ சமயம் கிடைக்கும் பொழுது விட்டு வைப்பாங்களா?
இதைத்தான் கர்மாவின் வினையை அனுபவிக்கணுமுன்னு அந்த ஜோசியர் சொன்னாரா?
தான் கனகுவின் பேரன் இல்லை
அவன் தம்பி கதிரின் பேரன்தான்னு விச்சுவுக்கும் தெரிஞ்சிருக்குமோ?
ஆனால் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டின மாதிரி பெரிய தாத்தா கனகு செஞ்ச திரிசமன் வேலைகளுக்கு காஞ்சனமாலா விஸ்வகர்மாவை ஏன் பழிவாங்க நினைக்கிறாள்?
ஆனால் அவனைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்ய மாட்டேன் விச்சுதான் வேணும்ன்னும் சொல்லுறாள்
இந்த பயல் விச்சுவும் ரொம்பவே காய்ந்து போய் காஞ்ச்சு காஞ்ச்சு காஞ்ச்சுன்னுதான் உருகுறான்
எது எப்படியோ இருபத்தெட்டு வயசுக்குள் விச்சுவுக்கு ஒரு நல்லது நடந்தால் சரி